பால் வாங்க வந்த சிறுமி... பாழாக்கிய வியாபாரி!
பதறவைக்கும் புதுச்சேரி
குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்டாலும், தனி மனித ஒழுக்கத்தினால் மட்டுமே இது போன்ற அவலங்களைத் தடுக்க முடியும்.
இது புதுவை சொல்லும் பாடம்.சர்க்கரை ஆலைக்கு பெயர் போன கிராமம் லிங்கா ரெட்டிப்பாளையம். அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்த 9 வயது மாணவியை, அதே கிராமத்தைச் சேர்ந்த மளிகைக் கடை வியாபாரி ஆறுமுகம் காட்டுமிராண்டித்தனமாக சீரழித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மீனாவிடம் பேசினோம். என்புள்ளைக்கு நடந்த மாதிரி வேறெந்த புள்ளைக்கும்