யாழ்.தேவியை வரவேற்க நாவற்குழி பாலம் தயார்
கொழும்பு -காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் குடாநாட்டிலுள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.
அதன் ஒரு அம்சமாக யாழ்ப்பாணத்தில் முக்கிய புகையிரத நிலையங்களில் ஒன்றான நாவற்குழிப் புகையிரத நிலையத்தின் தோற்றத்தையும்,அதிலிருந்து சிறிது தூரம் செல்லும் பொழுது நாவற்குழி கடல் எல்லையினை ஊடறுத்துச் செல்லும் பாலத்தின் நவீன தோற்றத்துடனும் இது அமைக்கப்பட்டுள்ளது.