புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014


நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
 
நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூர் கலாஷேத்ராவில் உள்ளது. நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை நம்பருக்கு மர்ம நபர் பேசினான். திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அது வெடிக்கும் என்று சொல்லி போனை துண்டித்து விட்டான். 

இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் அஜீத் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். 

இறுதியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அஜீத் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர்களை பிடித்து விசாரிக்கப்பட்டனர். 108 நம்பருக்கு பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவன் எந்த போன் நம்பரில் இருந்து தொடர்பு கொண்டான் என்று போலீசார் ஆய்வு செய்தனர். அந்த நம்பரை கண்டுபிடித்து விட்டதாகவும் மிரட்டல் விடுத்தவன் விரைவில் பிடிபடுவான் என்றும் கூறப்படுகிறது. 

அஜீத் பி.ஆர்.ஓ.விடம் விசாரித்தபோது, வெடிகுண்டு இருப்பதாக ஒரு புரளி கிளம்பியது. போலீசார் வந்து சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை என்றும், புரளியான செய்தி என்றும் கூறிவிட்டு சென்றனர் என்றார். 

ad

ad