அமைச்சர் பவித்ராவை கெட்ட வார்த்தையால் திட்டிய பிரதியமைச்சர்
தனக்கு அறிவிக்காமல் மின் விநியோக திட்டங்களை ஆரம்பித்து வைப்பது, வேலைவாய்ப்புகளை வழங்குவது குறித்தும் ஜனாதிபதியிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை அழைத்து ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளதாக கூறப்படுகிறது.
மின்வலு எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.