புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014

இலங்கைப் பெண் சடலமாக மீட்பு 
 மேற்கு சிட்னியில் சிறிய நதிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரின் சடலம் தொடர்பாக அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

 
 
குறிப்பிட்ட பெண்ணிண் சகோதரர் ஒருவரே சிறிய நதிப் பகுதியிலிருந்து பெண்ணின் உடலை மீட்டுள்ளார் என்று அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கு சிட்னியில் தனது சகோதரனுடன் வசித்து வந்த அமேசா ராஜபக்‌ஷ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
 
 
தலைப்பட்டியால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சென்ற அமேசா ஒரு கணினி பட்டதாரி என்று தெரிவித்துள்ள பொலிஸார், அவர் திருமணமாகதவர் எனவும் அவரது மரணத்தில் ஏதாவது சந்தேகமிருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக மரணவிசாரணை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். 
i

ad

ad