புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்

ஸ்பெயின் நாட்டில் 10 மாத குழந்தை தன் தாயால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸை சேர்ந்தவர் கத்ரினா காடிட் ஸ்டஹேலி(40). இவர் மன வளர்ச்சி குன்றிய தன் 10 மாத குழந்தையை சுவிஸ் மருத்துவமனை
அங்கீகாரம் இன்றி ஸ்பெயின் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது மத்திய தரைக்கடல் கடற்கரை பகுதியில் ஸ்பானிஷ் பொலிசார் இவரிடம் விசாரணை மேற்கொண்டு குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையை குளிப்பாட்டுவதாக கூறி அதிகாரிகளிடமிருந்து அனுமதிபெற்ற கத்ரினா குழந்தையின் தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து தற்கொலைக்கு முயன்ற கத்ரினாவை பொலிசார் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ad

ad