புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014



சுவிட்சர்லாந்தில் வலைஸ் மாநில (VALIAS)  சியோன்  மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் சந்தேகமான பின்னணியில் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்திலுள்ள VALIAS மருத்துவமனை அரிய மருத்துவ மனைகளில் ஒன்றானது. இங்கு கல்லீரல் பெருங்குடல், கணையம், உணவுக் குழாய், மற்றும் உள்ளுறுப்பு சிறப்பு அறுவைச் சிகிச்சைக்கு பெயர்போன மருத்துவமனையாகும்.

இந்த VALIAS மண்டல மருத்துவமனையின் தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் வின்சென்ட். இவர் கடந்த 2010ம் ஆண்டு அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருந்தபோது தொலைக்காட்சியில் காற்பந்தாட்டபோட்டியை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.
இதன் விளைவாக இரண்டு நோயாளிகள் உயிரிழந்தனர், பின்னர் குற்றம்சாட்டப்பட்ட வின்சென்ட் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், VIGOUSSE என்ற பத்திரிகை மருத்துவமனையில் மேலும் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளதை வெளிப்படுத்தியபொழுது, அதிர்ச்சி அலைகள் இந்த மருத்துவமனையைத் தாக்கின.
மருத்துவமனையானது, வின்சென்ட்டின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டபோதிலும், இன்னும் சில நாட்களுக்குப் பின்னர் அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறுவார் எனக் கூறியது.
ATS, செய்திக் குறிப்பின்படி, மருத்துவர் வின்சென்ட், மருத்துவமனையின் உள் விசாரணையிருந்து தப்பியபொழுதும், இறந்தவரின் குற்ற வழக்கினையும், பாராளுமன்ற வெளி விசாரணையையும் சந்திக்க வேண்டிய காலக் கட்டாயத்தில் உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

ad

ad