புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2012

ஹத்துருசிங்கவின் முன் மண்டியிட்டு தாய்மார்கள் அழும் போது படையினரின் பலகாரத்தை ருசித்துக் கொண்டிருந்த வசந்தி அரசரட்ணம் !!!


கைதான நான்கு மாணவர்களையும் விடுவித்தால்தான் பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்போம் என்பீர்களானால் அது நடக்காது. கைதான மாணவர்கள் இன்றும் பிரபாகரன் இருக்கிறார் என்று வாதிடுகின்றனர்.

அவர்களை அவரே காப்பாற்றுவார்” யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவப் பிரதிநிதிகள், கைதான மாணவர்களது பெற்றோர்கள் மத்தியில் இறுமாப்புடன் பேசிய விடயம் இது.

கடந்த நவம்பர் மாதம் 27 ஆம், 28ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகம் இராணுவ மயமாகி இருந்தது. 27ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாள் என்பதாலும் அன்றே மாவீரர் தினமும் கொண்டாடப்பட்டது என்பதாலும் பல்கலை வளாகத்தை இராணுவம் முற்றுகையிட்டிருந்தது.

பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் தினத்தைக் கொண்டாடி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் முழு முயற்சி எடுத்திருந்தனர். இராணுவப் புலனாய்வாளர்களின் வெளிப்படையான அச்சுறுத்தல்கள் மத்தியிலும் மாணவர்கள் போரில் இறந்து போன தமது உறவுகளுக்காக அஞ்சலிக்க வேண்டிய தமது கடமையை நிறுத்திவிடவில்லை.

உணர்வுகளை எப்படித்தான் கட்டுப்படுத்துவது? அவர்கள் அமைதியான முறையில் தமது கடமைகளை நிறைவேற்றி விட்டனர். ஆனாலும் 27ஆம் திகதி இரவு இராணுவத்தினர் சீருடையுடன் பெண்கள் விடுதிக்குள் புகுந்து விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து 28ஆம் திகதி காலை பல்கலை மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர். அவர்களது போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.

பல்கலைக்கழகப் பிரதான வாயிலில் இருந்து விஞ்ஞான பீட வாயில் வரை பேரணியாகச் செல்வது என அவர்கள் திட்டமிட்டிருந்தனர். பேரணியாக மாணவர்கள் நகரத் தொடங்கியபோது வளாகத்துக்கு வெளியே குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் புலனாய்வாளர்களும் திடீரென மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

காரணமற்ற கைது

ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட அன்று நான்கு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஓரிரு மணித்தியாலயங்களில் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பிற்பாடு ஸ்ரீரெலோ அலுவலகம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டு கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜனமேஜெயந், மருத்துவ பீட மாணவன் சுதர்சன், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் சொலமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அன்று நள்ளிரவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்சானந் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இரண்டு நாள்களின் பின்னர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் பவானந்தன் விசாரணைக்காக அழைக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டார்.

மருத்துவ பீட மாணவன் சுதர்சன் மூன்று நாள்களில் விடுவிக்கப்பட ஏனைய நால்வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வெலிக்கந்த, கந்தக்கடுவ புனர்வாழ்வு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுக்கும் ஸ்ரீரெலோ காரியாலயத்துக்கு பெற்றோல் குண்டு வீசியவர்களுக்கும் முடிச்சுப்போட நினைத்தவர்கள் வெளிப்படையாகவே விடுதலைப்புலிகளின் மாவீரர் நாளைக் கொண்டாடியமைக்காகவே கைதானார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இராணுவத் தளபதியின் கண்டுபிடிப்பு

புனர்வாழ்வு பெற்றுவரும் நான்கு மாணவர்களும், தலைவர் இருக்கிறார் என வாதிடுகிறார்களாம். வெளிநாட்டில் இருக்கும் புலி ஆதரவாளர்களே இவர்களுக்கு உரமூட்டுகிறார்களாம்.

பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஒரு போராட்டம் உருவாகும், அதன்மூலம் நாங்கள் தமிழீழம் பெறுவோம் என்று அடாப்பிடியாய் நிற்கிறார்களாம். இதனால் அவர்களை இப்போதைக்கு விடுதலை செய்யமுடியாது என்று அடித்துக் கூறியிருக்கிறார் இராணுவத் தளபதி.

தாயின் புலம்பல்

நடைபெற்ற சந்திப்பில் கைதான மாணவர்களின் பெற்றோர்களும் உடனிருந்தனர். இராணுவத் தளபதியின் கருத்துக்களைக் கேட்டதும் அந்தத் தாய்மார் எழுந்து “ஐயா, எங்கள் பிள்ளைகள் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள், அவர்கள் அப்படியானவர்கள் அல்லர். அவர்களை விடுதலை செய்துவிடுங்கள்” என்று இரந்துள்ளனர்.

தாய்மாரின் கண்ணீரை நிராகரித்த இராணுவத் தளபதி உங்கள் பிள்ளைகள் இப்படித்தான் பேசுகிறார்கள். நேற்றும் கூட அவர்கள் அதனைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். விரும்பினால் உங்கள் பிள்ளைகளை நீங்கள் சந்திக்கச் செல்லும்போது முடிந்தால் “பிரபாகரன் பற்றியோ விடுதலைப் போராட்டம் பற்றியோ பேசாதிருக்கச் சொல்லுங்கள்” என்றார்.

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவின் முன்பு தாய்மார்கள் கதறுவதையும், அவர்களை ஒரு புழுவைப் போல் இளக்காரமாக யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி பார்ப்பதையும் அருகில் எதுவும் அறியாத அப்பாவிபோல் இருந்து பலகாரத்தை ருசிக்கும் யாழ் பல்கலைத் துணைவேந்தர் வசந்தி அரசரட்னத்தையும் படத்தில் பார்க்கின்றீர்கள்..
ஹத்துருசிங்கவின் முன் மண்டியிட்டு தாய்மார்கள் அழும் போது படையினரின் பலகாரத்தை ருசித்துக் கொண்டிருந்த வசந்தி அரசரட்ணம் !!!

கைதான நான்கு மாணவர்களையும் விடுவித்தால்தான் பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்போம் என்பீர்களானால் அது நடக்காது. கைதான மாணவர்கள் இன்றும் பிரபாகரன் இருக்கிறார் என்று வாதிடுகின்றனர்.

India 133/9 (20/20 ov)
Pakistan 134/5 (19.4/20 ov)
Pakistan won by 5 wickets (with 2 balls remaining)
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2013ம் ஆண்டுக்காக வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.  நேற்று திங்கட்கிழமை சபையின் அமர்வில் தவிசாளரால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 4 பேர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்து வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்துள்ளனர். இவ் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி ஆட்சி அமைத்து செயற்பட்டு வருகின்ற நிலையில் சபையின் மாதாந்த அமர்வு

வாணி, சரிகா போல் கெளதமி கல்யாணம் செய்து கொள்ளுமாறு என்னை வற்புறுத்தவில்லை. கமல்
www.thedipaar.com
தான் திருமணமே செய்திருந்திருக்கக் கூடாது என்று உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை. நான் திருமணமே முடிக்காமல் இருந்திருக்கணும்.

யாழ். புத்தூர் வடக்கில் வசிக்கும் முகுந்தன் என்ற ஈபிடிபி உறுப்பினர் ஒருவரை திருமணம் செய்ய கனடாவில் இருந்து சென்ற தமிழ்ப்பெண்  இனந்தெரியாத நபர்களினால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் குறித்த பெண் புத்தூர் வடக்கில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த வேளை எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் காற்று வெளி கிராமம் 2012 படங்கள் 

காதலிக்க கற்றுக்கொள்கிறான் என்று தூற்றுகிறார்கள்! திருமாவளவன் பேச்சு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 50வது பிறந்தநாளை பொன்விழாவாக அறிவித்து அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளரான கவிஞர் புதுவை இரத்தினதுரை இராணுவத்தின் தடுப்புக்காவலில்? 

 இந்திய ஊடகங்கள்விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளராக செயற்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை இலங்கை இராணுவத்தின்






KATTUVALIKIRAMAM 2013

KATRUVELIKKIRAMAM 2012 .UK LASTDAY
 குப்தில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார். 
நியூசிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டியில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய 2-வது போட்டி நேற்று நடந்தது. 

இந்தியாவில் இசை, நடனம், நாடகம், திரைத்துறை மற்றும் பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைத் துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இசை, நடனம், நாடகக் கலைகளுக்கான தேசிய மன்றம் சார்பில் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

இசைஞானி இளையராஜா, ராஜசேகர் மன்சூர் (இந்துஸ்தானி குரலிசை), அஜய் போகங்கர் (இந்துஸ்தானி குரலிசை),

வவுனியாவில் 3,428 குடும்பங்கள் இடப்பெயர்வு; மேலும் அதிகரிக்கலாம்
வவுனியாவில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக 3428 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

24 டிச., 2012


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை போன்றோர், சிறிலங்கா இராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கருதினர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் சவேந்திர சில்வாவை பதவியில் இருந்து

தற்போது வாகரைப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீ.யோகேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை மரக்கறி உட்பட்ட உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் படுக்கை விரிப்பு அத்தியாவசிய பொருட்களுடன் படகு மூலம் வெள்ளத்தின் பின் இரண்டாவது தடவையாக வாகரை பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு சென்று சகல கிராமங்களையும் இடைத்தங்கல் முகாம்களையும் பார்வையிட்டதுடன் மக்களுக்கு தேவையான

பொய் வழக்கில் ஈழத் தமிழ் இளைஞர்கள் கைது: சிங்கள அரசின் ஏவலுக்குப் பணிவதா?
தமிழக, இந்திய அரசின் போக்குகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்!
- தொல்.திருமாவளவன்.

சென்னை, பல்லாவரம் அருகே தங்கிவரும் ஈழத் தமிழ் இளைஞர்கள் 10 பேரை அண்மையில் தமிழக க்யூ பிரிவு உளவுத் துறையினர் திடீரெனக் கைது செய்து அவர்களில் நால்வரை மட்டும் பொய் வழக்கில் சிறைப்படுத்தியுள்ளனர். மிச்சமுள்ள 6 பேர் என்ன

சோமாலியக் கடற்கொள்ளையர்கள் மீது திடீர் தாக்குதல்: இந்தியர்கள் உள்பட 22 பிணைக்கைதிகள் மீட்பு


பாரிசில் இடம்பெற்ற பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவு அமைதிப் பேரணி!

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்: இன்று எம்.ஜி.ஆர்., நினைவு தினம்
மக்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1917 ஜன., 17 ல் பிறந்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர்.

பாஜகவின் மதவாதம் தெளிவாகத் தெரிந்த காரணத்தினால்தான் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் திமுக செயல்படுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழ்ப் பெண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது.மஹரகம பிலியந்தல லும்பினி ஒழுங்கையிலுள்ள வீட்டிலிருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.
கொலை செய்யப்பட்ட பெண் தாயுடன் வசித்து வந்ததார். அவரது கணவர் சில காலங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறி நேற்றுமுன்தினமே மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தார். பெண்ணின் தாயாருடன் அவர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை அயலவர்கள் அவதானித்துள்ளனர்

கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமோ அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடமோ முறைப்பாடு செய்யக்கூடாது என்றும் இராணுவத்தினர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல்கொடுக்கின்ற அமைப்பொன்றின் தலைவி தெரிவித்தார்.
இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அது தொடர்பாக மனித உரிமைகள் அமைப்புக்களிடம் முறையிடக்கூடாது என மக்கள் பாதுகாப்புத் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் மாவட்டம் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதைகள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸ் தெரிவித்தார்.இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
குஞ்சுக்குளத்திற்கான தரை வழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் குஞ்சுக்குளம் தொங்கு பாலத்திலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. குஞ்சுக்குளம் பிரதான துருசின் நீர்மட்ட அளவு 14.2 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது.இதேவேளை, குறித்த பாதைகளில் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதினால் வீதிகளில் பாரிய குழிகள் காணப்படுகின்றன. இதனால் குறித்த கிராம மக்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனரென அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 9 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 60 ஆயிரத்து 784 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 22 ஆயிரத்து 699 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 5 ஆயிரத்து 25 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 168 பேர் 100 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 3 ஆயிரத்து 136 வீடுகள் முற்றாகவும் 7 ஆயிரத்து 694 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

அடுத்துவரும் சில நாட்களுக்கு கனத்த மழை பெய்யும்!- வளிமண்டலவியல் திணைக்களம்
அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலையாளர் பபோதினி கருணாபால நேற்று தெரிவித்தார்.

Latest News
வவுனியாவில் அடை மழை! குளங்கள் உடைப்பெடுத்து பல கிராமங்கள் நீரில் மூழ்கின! யாழ். போக்குவரத்தும் பாதிப்பு
DECEMBER 23, 2012 

வவுனியாவில் பெய்து வரும் அடை மழை காரணமாக குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்து உடைப்பெடுத்துள்ளன. இதன் காரணமாக பல  கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தாண்டிக்குளம், திருநாவற்குளம், சமணங்குளம், கோமரசங்குளம், கந்தசாமி நகர், குடியிருப்பு, புதுக்குளம், பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளதுடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி  மக்களும் வெளியேறி வருகின்றனர்.

அதன்படி பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதன் 6 அவசர வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் பூவரசங்குளம் ஊடன செட்டிகுளம் வீதியே இனம்காண முடியாமல் வெள்ளம் நிரம்பி  வழிந்தோடுகின்றது.

குறித்த வீதிக்கு அருகே உள்ள கந்தசாமி நகர், வீடியா நகர் ஆகிய கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் வெளியிடத் தொடர்புகள் அற்ற நிலையில் காணப்படுகின்றது. அதனால் அங்குள்ள 39 குடும்பங்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் நொச்சிமோட்டைப் பாலம் மேவிப் பாய்வதனால் ஏ9 வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

அதன்படி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இருப்பினும் பெரியளவிலான வாகனங்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஹயெஸ் போன்ற சிறியரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியாவில் அடை மழை! குளங்கள் உடைப்பெடுத்து பல கிராமங்கள் நீரில் மூழ்கின! யாழ். போக்குவரத்தும் பாதிப்பு

வவுனியாவில் பெய்து வரும் அடை மழை காரணமாக குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்து உடைப்பெடுத்துள்ளன. இதன் காரணமாக பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

23 டிச., 2012


கனடா -ஒண்டோரியோவிலும் க்யுபெக்கிலும் கடுமையான மழை!

 உறையவிக்கும் குளிரும் மழையும் பனியும் ஒண்டோரியோவையும் தென் க்யுபெக்கையும் வாட்டி எடுத்து விட்டது. தெற்கு ஒண்டோரியோவில் கடுமையான மழையைத் தொடர்ந்து உறையவைக்கும்

``போட்டியில் மீண்டும் விளையாடுவதை நினைத்து பதட்டமாக உள்ளது,'' என, ஸ்பெயின் டென்னிஸ் வீரர் நடால் தெரிவித்தார்.
டென்னிஸ் அரங்கில் "நம்பர்-4' இடத்தில் <<உள்ளவர் ஸ்பெயினின் நடால், 26. இதுவரை 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இவரின், இடது முழங்காலில் ஏற்பட்ட

இங்கிலாந்தில் உள்ள Newcastle நகரில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, பயங்கர வன்முறை நடந்தது. காவல்துறையினருக்கு ஒரு சவாலான நாளாக இருந்ததாக லண்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

www.thedipaar.com



 ''சமூக, அரசியல் விழிப்பு உணர்வு அதிகம் உள்ள தமிழ்நாட்டில் தலித் - தலித் அல்லாதோர் என்ற பிரிவினையை உருவாக்க நினைப்பது மிக மோசமானது. இந்தக் குறிப்பிட்ட பிரச்னையில் பா.ம.க-வைத் தனிமைப்படுத்த வேண்டும்!'' 
ர்மபுரி தீ இன்னும் அடங்கவில்லை. தலித்-தலித் அல்லாதோர் பிரிவினையாக, அதை மாநிலம் முழுக்க விரிவுபடுத்தும் சதியை சிலர் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். 'இது மிக அபாயகரமான போக்கு’ என எச்சரிக்கும் அரசியல் தலைவர்கள், கடந்த வாரம்

 ‘எனக்கு வாழ ஆசையாக இருக்கிறது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்‘ என்று எழுதி காட்டினார்-டெல்லிமாணவி
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடும் பஸ்சில் பிசியோதெரபி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அவருக்கு சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை

யாழ். குடாநாட்டில் 15 ஆயிரத்து 100 இராணுவத்தினரே உள்ளனர். 
இதற்கு மேலதிகமாக ஒரு இராணுவ வீரர் கூட யாழ்ப்பாணத்தில் இல்லை. இலங்கையில் இருப்பது சிங்கள இராணுவம் அல்ல, இலங்கை இராணுவமே என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பலாலி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இலங்கையில் இருப்பது இலங்கை இராணுவமே. அதில் சிங்களம், தமிழ் எனப் பிரிவுகள் இல்லை. இலங்கை இராணுவத்தில் 2 இலட்சம் பேர் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் 15 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.நாட்டில் எந்தப் பகுதியிலும் மேலதிகமாக இராணுவத்தினர் நிலைநிறுத்தப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

www.thedipaar.com

தலைநகர் டெல்லியில் 23 வயது துணை மருத்துவ மாணவி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பருடன் பஸ்சில் பயணம் செய்தபோது, ஒரு கொடிய கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.
இந்தச்சம்பவம், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். இருப்பினும் அவர்களை உடனே தூக்கில் போட வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்து வருகின்றன.Photos.Video
அமெரிக்காவில் மற்றொரு துப்பாக்கி சூடு: அதிர்ச்சியில் உறைந்துள்ள மக்கள்
அமெரிக்காவில் 20 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், மற்றொரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.அமெரிக்காவின் கனெக்டிக்ட் மாகாணத்தில் தொடக்க பள்ளிக்குள் நுழைந்த ஆடம் லான்சா என்பவர், 20 குழந்தைகள் உட்பட 28 பேரை சுட்டுக் கொன்றார்.இதனால் துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கீசிவுடன் பகுதியில் நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர், இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.இந்த துப்பாக்கி சூட்டை தடுக்க வந்த பொலிசாரும் சுடப்பட்டனர். இவ்வாறு அடுத்தடுத்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்வதால், எப்போது என்ன நடக்கும் என்ற அதிர்ச்சியில் மக்கள் உறைந்துள்னர்.
மின்னஞ்சலில் கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொந்தரவு செய்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். 
தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி, தனது வேலை விசயமாக சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு தனது பயோடேட்டாவை அனுப்பியிருந்தார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தினகர் பிரசாத்(வயது 37) என்பவர்., அந்த மாணவியின் பயோடேட்டா மூலம்

ஏன் தடை விதிக்க கூடாது: ராமதாசுக்கு கலெக்டர் நோட்டீஸ்

மதுரை மாவட்டத்திற்குள் நுழைய உங்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது: டாக்டர் ராமதாசுக்கு கலெக்டர் நோட்டீஸ்.
 1/1 
மதுரை,டிச.23 - மதுரை மாவட்டத்திற்குள் நுழைய உங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என கேட்டு கலெக்டர் அன்சுல்மிஸ்ரா டாக்டர் ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.   மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா பாட்டாளி மக்கள்கட்சி தலைவர் டாக்டர் ராமதாசுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது, மதுரை மாவட்டத்தில் பா.ம.க நிறுவனர் தலைவர் டாக்டர். ராமதாஸ் 20.12.2012 அன்று வருகை புரிந்து அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை கூட்டம் நடத்தி ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.  இதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நடுவர்  அவர் மீது மதுரை மாவட்டத்திற்குள் நுழைவதற்கு ஏன் தடைஉத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்பதற்கான முகாந்திரம் கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்திரவிட்டுள்ளார்.

மாவீரர்களுக்காக வீடுகளில் விளக்கேற்றி நினைவுகூரலாம்!- கெஹலிய ரம்புக்வெல
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது உறவுகளுக்காகவும், உடன் பிறப்புகளுக்காகவும் விளக்கேற்றி நினைவு கூருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. ஆனால் அதனை அவர்கள் தமது வீடுகளில் செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
ஒரு முகநூல் பக்கம் -நீங்களும் பாருங்கள் 

இப்போது சில நாட்களாக சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வருகிறது .தென் தமிழீழப் பகுதி சற்று வெள்ளத்தால்  பாதிக்கப் பட்டாலும் சிங்களப் பகுதிகளே மண் சரிவு வெள்ளம் என அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது  இதுவரை 27 பேர் மரணமடைந்து உள்ளார்கள் பாதிக்கப் பட்டது அப்பாவி மக்களாக இருந்தால்   நாமும் அனுதாபப் படுகிறோம் .இயற்கையின் அழிவு என்பதால் இதை விட நாம் எதுவும் செய்ய முடியாது ..

சிங்கள இனவாதிகளும்  வெளியே காவி உள்ளே சாக்கடை கொண்ட  சிங்கள பிக்குமாரும் இதை வேறு விதமாக சிந்திக்கிறார்கள் ..தமது நாட்டுக்கு எதோ தோஷம் இருகிறதாம்  அதனால் தான் இந்தத் தொடர் அழிவு என்கிறார்கள் .எனவே  இரண்டு நாட்களுக்கு பவ்த்த உயர் பீடமான கண்டி தலதா மாளிகையில் பூயை செய்யப் போகிறார்களாம் இதற்காக  பல நாடுகளில் இருந்து பவ்த்த தேரர்களை வரவளைத்து உள்ளார்களாம் ..

குற்றம் செய்பவனுக்கு நன்கு தெரியும் தான் தவறு செய்கிறேன் என்பது .அந்தக் குற்ற உணர்விலேயே அவன் அழிந்து போவான் ..அடேய் சிங்களக் காட்டு மிராண்டிகளே  ..! முள்ளிவாய்க்காலில்   ஆயிரக் கணக்கான தமிழர்களை குஞ்சி குழந்தை என்று கூட பார்க்காமல் ஈவறக்கம் இன்றி கொன்று குவித்து மகிழ்ந்தீர்களே .மனிதன் என்று கூட பார்க்காமல் அம்மணமாய் போட்டு சுட்டீர்களே..!!   விடுதலைக்காக ஏங்கிய அவர்களின் ஆத்மா விடுதலை இன்றி பிரிந்தது அது இன்னும் அமைதி அடையாமல் அலைகிறது    .அதற்கு நீங்கள் எப்படித்தான் விமோசனம் தேட உலகம் எல்லாம் இருந்து பிக்குக்களை இறக்கி பூயை புண்ணியம் செய்தாலும் அவர்களுக்கு  நீங்கள் செய்த கொடுமை என்றுமே  தீராது ..இருண்ட உலகம் உங்களை மன்னித்தாலும் இயற்கை உங்களை ஒருபோதும் மன்னிக்கவே மன்னிக்காது .

குறிப்பு : முகநூலில் உலாவும் தமிழனாக (வ) பிறந்து   சிங்களத்துக்கு சேவை செய்யும்    அடியார்களே உங்கள் எசமான்களுக்கு  எடுத்துக் கூறுங்கள் ...
                                           ...பா .சங்கிலியன் ...
இப்போது சில நாட்களாக சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வருகிறது .தென் தமிழீழப் பகுதி சற்று வெள்ளத்தால் பாதிக்கப் பட்டாலும் சிங்களப் பகுதிகளே மண் சரிவு வெள்ளம் என அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது இதுவரை 27 பேர் மரணமடைந்து உள்ளார்கள் பாதிக்கப் பட்டது அப்பாவி மக்களாக இருந்தால் நாமும் அனுதாபப் படுகிறோம் .இயற்கையின் அழிவு என்பதால் இதை விட நாம் எதுவும் செய்ய முடியாது ..

சிங்கள இனவாதிகளும் வெளியே காவி உள்ளே சாக்கடை கொண்ட சிங்கள பிக்குமாரும் இதை வேறு விதமாக சிந்திக்கிறார்கள் ..தமது நாட்டுக்கு எதோ தோஷம் இருகிறதாம் அதனால் தான்

தமிழகத்தில் தொடரும் சாதியத் தாக்குதல்களைத் தடுக்க வேண்டும்! பிற்படுத்தப்பட்டோர் வருமான வரம்பை ரூபாய் 12 இலட்சமாக உயர்த்த வேண்டும்! இந்தியத் தலைமை அமைச்சரிடம் தொல்.திருமாவளவன் நேரில் வலியுறுத்தல்
இன்று (22-12-2012) பகல் 12 மணியளவில் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்தார். அப்போது, அண்மைக் காலமாக தமிழ்நாட்டில்

22 டிச., 2012


2016 தேர்தலில் போட்டி – நாம் தமிழர் கட்சி தீர்மானம்


 சென்னை: வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதென சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்த கட்சியின் முதல்

விடுதலைப் புலிகளை வவுனியாவில் நேரில் சந்தித்தார், இந்திய ராணுவ தளபதி 


இந்த வகையில், வவுனியாவுக்கு இன்று விஜயம் செய்தார் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங். அவரை வரவேற்ற வவுனியா ராணுவத் தளத்துக்கான ராணுவத் தளபதி தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்படும் புனர்வாழ்வுப் பயிற்சிகள்,

புனர்வாழ்வு இன்றி மாணவரை விடுவிக்குக – மாவை


தற்கொலை செய்த மகாதேவனுக்கு என்ன பிரச்சனை? பாடகி நித்யஸ்ரீயின் கார் டிரைவர் பரபரப்பு தகவல்

சென்னை: கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் கடந்த 5 ஆண்டுகளாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரின் கார் டிரைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார். பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு

இது தொடர்பில் குளத்தின் நீர்பாசனப் பொறியியலாளர் தகவல் தருகையில்,கிளிநொச்சி இரணைமடுக் குளத்துக்கான நீர் வரத்து அதிகரித்திருப்பதால் அதன் வான்கதவுகள் இன்று ஒருமணிக்கு திறக்கப்படவுள்ளன.
ஆசிய சாம்பியன் ஹாக்கியில் இந்தியாவுக்கு 2-வது வெற்றி: ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
கத்தார் தலைநகர் டோகாவில் ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான் மலேசியா, ஓமன் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது

சீரற்ற காலநிலை: 30 பேர் பலி, 22 பேரை காணவில்லை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 74 ஆயிரத்து 995 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 87 ஆயிரத்து 641 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களான ரிலையன்ஸ் நிறுவன தலைவர்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் சுவிஸ் கணக்கு எண்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள H.S.B.C., வங்கியில் அம்பானி சகோதர்கள் வரி கட்டாமல் முறைகேடாக பதுக்கப்பட்ட கறுப்புப்பணம் இருப்பதாக இந்தியாவின் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.இந்நிலையில் அவர்களது கணக்கு எண்களான 5090160983 மற்றும் 5090160984 ஆகியவற்றை கெஜ்ரிவால் நேற்று வெளியிட்டார்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சீனர்கள் கைது
இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள ஆக்கிரமிப்புப் படை முற்றாக வெளியேற்றப்படுவதே ஒரே வழி!– பிரதமர் உருத்திரகுமாரன்
தமிழர் தாயகத்தில் சிங்களப் படையினர் நிலைகொண்டிருக்கும் வரை தமிழ் மக்களுக்கு ஜனநாயகவெளியோ பாதுகாப்புணர்வோ கிடைக்கப்போவதில்லை. சிங்களப் படையினர் தமிழர் தாயகப் பகுதியில் இருந்து முற்றாக வெளியேறல் அவசியமானதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்

இறந்த தலைவருக்கு வீர வணக்கம் செய்யாதவன் மனிதனே அல்ல!- சீமான் ஆவேசம்
இனத்துக்காக போராடிய பெருந்தகைகளுக்கு மரணத்தின் பின் வீரவணக்கம் செலுத்தாதவன் உண்மைத் தமிழன் அல்ல என்பதற்கு மேலாக, அவன் மனிதனே அல்ல. கீழ்த்தரமான அவனை சரித்திரம் மன்னிக்காது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

கல்முனையில் 13 அடி நீளமான முதலை பிரதேச மக்களால் பிடிப்பு
கல்முனை, மருதமுனை பிரதேச கடற்கரையில் இன்று 13 நீளமான முதலை ஒன்று பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனத்தையே இல்லாமல்

செய்யும் இன்னொரு கொடூர யுத்தம்!

தமிழீழ விடுதலைப் போராட்டம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட பின்னர் தற்போது தமிழர் தாயகத்தில் புதிய யுத்தங்கள் முளைவிட்டுள்ளன. விடுதலைப் போராட்ட காலத்தில் சிறீலங்கா அரசு முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தை காட்டிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற யுத்தம் கொடூரமானது. இந்த யுத்தம் இன்னும் சில காலம் நீடிப்பதற்கு நாம் அனுமதிப்போமாயின் ஈழத் தமிழ் மக்கள் தமது அடையாளத்தை இழந்துவிடுவர்.

குஜராத் செல்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோதி வரும் 26-ம் தேதி மீண்டும் பதவி ஏற்கிறார்.நான்காவது முறையாக குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்கும் நரேந்திர



இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்து நாடு திரும்பிய பெண்ணொருவர் தனது உயிரிழந்த இரண்டு மாத குழந்தையுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கையர்களில் 21 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இந்த நாடு திரும்பிய குழுவினருடனே குறித்த பெண் தனது குழந்தையின் சடலத்தையும் கொண்டு வந்துள்ளார்.


எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதம் 2013 இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. நீதியை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு இம்முறை ஐ.நா களம் அமைத்துக்கொடுக்கும் ஒரு முக்கிய காலமாக எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் இப்போர்க்குற்ற விசாரணைகளையும் தாண்டி தமிழர்களுடைய வேண்டுகோளென்பது நிரந்தர அரசியல் தீர்வை நோக்கியதாக அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் தம்மைத் தாமே ஆராயுமுகமாக வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்,

சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது.Photos
சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர்

21 டிச., 2012


தமிழ் நாட்டில் மேலும் மூன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும் நான்கு பேர், கடந்த புதன்; கிழமை தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.குறித்த மூன்று பேருள் ஒருவர், மதுரையில் இருப்பதாகவும், அவர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவரின் ஆட்சி விரைவில் அமையும் எனவும் கைது செய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் கூறிவருகின்றனர் என யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கும் யாழ் மாவட்ட கட்டளை தளபதிக்கும் இடையில் இன்று காலை 10 மணியளவில் பலாலி படைத் தலமையத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.  இச்சந்திப்பின்போதே 

தனது கணவர் ஏன் இறந்தார் என்பத குறித்து, பாடகி நித்யஸ்ரீயின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது போலீஸ். “கணவர் ஆற்றில் குதித்த விபரம் அறிந்தவுடன் நானும் அடையாறு பாலத்துக்கு ஓடிச் சென்றேன். அங்கே அப்போது அவரது உடல் கிடைத்திராத காரணத்தால், எப்படியும் அவர் உயிரோடு வருவார் என்று நம்பி…திரும்பி விட்டேன்” என்று அவர் தன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 ஆனால், நித்யஸ்ரீ வீடு திரும்பியபின், அவரது கணவர் மகாதேவன் இறந்து விட்டதாக தகவல் வந்து சேர்ந்ததாக சொல்கிறது, அவரது வாக்குமூலம். “தன் தாயார் மீது அளவுக்கதிகமான பாசம் வைத்திருந்த மகாதேவன், அவர் இறந்ததைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்” என்பதே வாக்குமூலம்

மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது கனவிலும் கூட நடக்காது! யாழ். படைத்தளபதி ஹத்துருசிங்க
பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யும் வரை யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என மாணவர்கள் காத்திருப்பது கனவிலும் கூட நடக்காது என யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

பந்தல் சேதமாக்கப்பட்ட போதிலும்,அடக்குமுறைக்கு எதிராக த.தே.கூட்டமைப்பின் உண்ணாவிரதம் ஆரம்பம்
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் அப்பாவி பொதுமக்களை காரணமின்றி கைது செய்து, தடுத்து வைத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

ஐரோப்பாவிற்கு விஜயம் செய்ய உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இரண்டு வாரங்கள் அங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்வார் எனக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் இணங்கும் வரையில் அந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதை அவுஸ்திரேலிய அரசாங்கமும் கிரிக்கெட் சபையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்


கனடாபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் பூவரசம்பொழுது  புகைப்படங்கள் கீழே அழுத்தவும் 
நாசா விண்வெளி மறுப்பு:அமெரிக்காவின் "நாசா' விண்வெளி ஆய்வு மையம் இதை மறுத்துள்ளது.
எரிமலை சீற்றம், சூரிய காந்த புயல், கோள்களின் மோதல், விண்கற்களின் தாக்குதல், சுனாமி உள்ளிட்ட பல காரணங்களால், உலகம் அழிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.ஆனால், மேற்கண்ட சம்பவங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால் தான் உலகம் அழியும்.


புனேவில் நடந்த முதல் "டுவென்டி-20 போட்டியில், இந்திய அணி இங்கிலாந்து அணியை 5 விக்‌கெட் வித்தியாசத்தில் வென்றது
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 2 "டுவென்டி-20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என இங்கிலந்து வென்றது. இரு அணிகள் பங்கேற்கும் முதல் "டுவென்டி-20 போட்டி புனேவில் இன்று நடக்கிற

 T3 வீதித் தொடருந்தின் இரண்டாவது பகுதி இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Porte D'Ivry முதல்  Potre de la Chapelle வரை 14,5 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யயும் இந்த T3 வீதித் தொடருந்து பிரபல அரசியல்வாதிகளின் பயணத்தோடு இன்றைய தனது முதற் பயணத்தைத் தொடங்கியது. 

இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படைகளுடன் இணைந்து இந்திய இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவினர், இரகசிய கூட்டுப் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நஹான் சிறப்புப்படை பயிற்சி நிலையத்திலேயே இந்தப் போர்ப்பயிற்சிகள் இடம்பெற்று வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஜெனரல் பிக்ரம் சிங், ஜனாதிபதிக்கு புத்தர் சிலையொன்றைக் அன்பளிப்பு செய்ததுடன், இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியாவினால் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று உறுதியளித்தார். ஐந்து நாள்

வெள்ளத்தில் மிதக்கிறது மட்டக்களப்பு ; உயிரிழப்பு 22ஆக உயர்வு

நாட்டில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் வெள்ளம், மண்சரிவு, மரம் முறிவு ஆகியவற்றில் சிக்கி நேற்று மாலை வரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 20 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். 50 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர் வாள் வெட்டுக்கு இலக்கு
யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் எல்லாம் வதந்தி : நாசா விஞ்ஞானி

 

மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் என்பவற்றை நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் முற்றாக மறுத்துள்ளார். கடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றது. மேலும் குறுந்தகவல், ஈமெயில்

20 டிச., 2012


கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை (படங்கள்)

thx nakeeran

England 157/6 (20/20 ov)
India 158/5 (17.5/20 ov)
India won by 5 wickets (with 13 balls remaining)

வடமராட்சி கிழக்கு பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்துள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து குறித்த சிறுமி குறித்த சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பில் தமது பெற்றோருக்கு சிறுமி அறிவிக்கவில்லை.


தமிழகத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை தமிழர் ஒருவர் பரிதாபமாக பலி
மின்விளக்கை அணைப்பதற்காக முயன்ற இலங்கைத் தமிழர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் நேற்றிரவு நடைபெற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை. மாணவர்களை விடுதலை செய்யுமாறு மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்!
பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும்  விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம்  இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது..
கணவர் மகாதேவன் தற்கொலை செய்தது குறித்து தகவல் அறிந்ததும் நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயன்றார். விஷம் குடித்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியானது. ஆனால் இதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். 

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாகிறார். அகமதாபாத்தின் புறநகர் பகுதியான மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட குஜராத் முதல்- மந்திரி மோ
குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மை இடங்களை பாரதீய ஜனதா கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. து. பா.ஜனதாவின் இந்த வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் கட்காரி நன்றி தெரிவித்துள்ளார்.


கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை!
சென்னை கோட்டூர்புரம் அடையாறு பாலத்திற்கு விலை உயர்ந்த ஆடம்பரமான கார் ஒன்று இன்று (20.12.2012) மதியம் 12.45 மணி அளவில் வந்தது. அந்த கார் திடீரென அடையாறு பாலத்தில் நின்றது. 


மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் நரேந்திர மோடி
குஜராத் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்த-ன் வாக்கு எண்ணிக்கை இன்று (20.12.2012) காலை தொடங்கியது. இதில் காலை முதலே பாஜக முன்னிலை பெற்றிருந்தது.

பாஜக 109 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 66 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் நரேந்திர மோடி என்று பாஜகவினர் கூறுகின்றனர்.

வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டவர்களை காப்பாற்றிய பெண்மணி

வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்ட ஐவரை பெண்மணி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் கெக்கிராவ ஆண்டியாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கெக்கிராவ பலாகல பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சென்ற ஜீப் வண்டி நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்.எம். நிலந்தி ரத்நாயக்க (35 வயது) என்ற ஒரு குழந்தையின் தாய் குறித்த நபர்களை காப்பாற்றியுள்ளார்.
மேற்படி அதிகாரிகள் நிவாரணப் பணிகளுக்காகச் சென்ற போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.



குஜராத்: 107 தொகுதிகளில் பாஜக முன்னிலை
பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில் கடந்த 13 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (19.12.2012) காலை தொடங்கியது.
பாஜக 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 60 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முன்னாள் முதல்வர் கோசுபாய் பட்டேல் தொடங்கிய குஜராத் பரிவர்த்தன் கட்சி 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 



இமாச்சலப் பிரதேசத்தில் 37 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை
முதல்வர் பிரேம்குமார் துமல் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்த-ல் 74.6 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை இன்று (20.12.2012) காலை தொடங்கியது. காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகள் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 
இலங்கை கஅரசின் உயரிய விருதான கலாபூஷணம்  பட்டமளிப்பின் பின்னர் மயில்வாகனத்துடன் (எழுத்தாளர் ஒலிபரப்பாளர் ஊடகவியலாளர் ) என் இனிய நண்பர் தம்பியையா தேவதாஸ் -சிவ-சந்திரபாலன் 

லண்டனில் சிங்கக் கொடியை பள்ளிக்கூடத்தில் இருந்து அகற்றிய 14 வயது மாணவன் !


தேசிய அவசர நிலைமையை பிரகடனப்படுத்தக் கோரிக்கை
இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் பெய்து வரும் அடைமழையை அடுத்து ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால்  மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.இதனைக் கருத்தில் கொண்டு தேசிய அவசர நிலைமையை பிரகடனப்படுத்துமாறு ஐ.தே.க வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசிடம் இந்தக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 15 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 68 ஆயிரத்து 904 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 66 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 5 ஆயிரத்து 231 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 753 பேர் 102 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், 358 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 907 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

சீரற்ற காலநிலை : புத்தளம் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்வு

தற்போது நாட்டிலேற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தையடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புத்தளம் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் கேர்ணல் ரணவீர தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் நாளை ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.இதேவேளை, மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய இராணுவத் தளபதி வட பகுதி உட்பட நாட்டிலுள்ள பிரதான இராணுவத் தளங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்நிலையில் வெள்ளிக்கிழமை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் ஜெனரல் பிக்ரம்சிங், அங்கு புனர்வாழ்வு பெறும் முன்னாள் புலிப்போராளியான தமிழினி உட்பட ஏனைய முன்னாள் புலிப் போராளிகளையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிலாபம் முன்னேஸ்வரம் குளம் உடைப்பெடுத்ததால் அப்பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் வள்ளங்கள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


மன்னார் சௌத்பார் பிரதான வீதியில் அமைந்துள்ள இரண்டு மதுபான சாலைகளையும், கள்ளு விற்பனை நிலையத்தையும் உடன் அகற்றக்கோரி மன்னாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.

பனங்கட்டுக்கோட்டு மீனவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 7 கிராம மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்புகளை வெளியிட்டனர்.

ad

ad