விடுதலைப் புலிகளை வவுனியாவில் நேரில் சந்தித்தார், இந்திய ராணுவ தளபதி
இந்த வகையில், வவுனியாவுக்கு இன்று விஜயம் செய்தார் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங். அவரை வரவேற்ற வவுனியா ராணுவத் தளத்துக்கான ராணுவத் தளபதி தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்படும் புனர்வாழ்வுப் பயிற்சிகள்,
மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, “கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான இறுதி யுத்தத்தின்போது, ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு, இந்த புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிகள் முடிவடைந்த பின்னர், கட்டம் கட்டமாக அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்” என்று விளக்கமளித்தார். இதனையடுத்து, பூந்தோட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ள முன்னாள் விடுதலைப் புலிகளுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையத்தையும் இந்திய ராணுவத் தளபதி பார்வையிட்டார். அங்கு தையல் பயிற்சிகள் வழங்கப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர்களுடனும் உரையாடினார்.