புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2012


அடுத்துவரும் சில நாட்களுக்கு கனத்த மழை பெய்யும்!- வளிமண்டலவியல் திணைக்களம்
அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலையாளர் பபோதினி கருணாபால நேற்று தெரிவித்தார்.
இலங்கைக்கு கிழக்காக வளி மண்டலத்தில் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதால், மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி வவுனியாவில் 225.7 மில்லி மீற்றர்கள் மழை பெய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலை காரணமாக வடக்கு, கிழக்கு வடமத்தி, மத்தி, ஊவா மாகாணங்களுக்கும், அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும் மேலும் அதிகரித்த மழை கிடைக்கப் பெறும்.
இதேநேரம், மன்னார் குடா, மேற்கு, தென், தென்கிழக்கு, கிழக்கு கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பு நிலையையும் அடைகின்றது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற மழை வீழ்ச்சி பதிவுப்படி அநுராதபுரத்தில் 130.6 மி. மீ., பொலனறுவையில் 119.0 மி. மீ. என்றபடி அதிக மழை பதிவாகியுள்ளது எனவும் அவர் கூறினார்.

ad

ad