"இது நீங்கள் மவுனமாக இருக்க வேண்டிய நேரமல்ல. நீங்கள் அமைதியாக இருந்தால் உங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவது போலாகிவிடு
-
27 ஏப்., 2013
வீரத்தமிழன் மேதகு பிரபாகரன் அவர்களிடம் இருந்த 56 படைத்துறைகளின் தொகுப்பு
1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத்
ஈழத்தமிழர்களின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்வதை தடுக்குமாறு கருணாநிதி கோரிக்கை
இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அவர்களுக்குச் சொந்தமான நிலப் பகுதிகளையெல்லாம் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து கைப்பற்றுகின்ற முயற்சிகளை இந்திய அரசும் உலக நாடுகளும் தலையிட்டு நிறுத்துமாறு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 ஏப்., 2013
வட மாகாணசபை தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி! – தயாமாஸ்டர்
இது தொடர்பில் அவர் கூறுகையில்,வடக்கு மாகாண சபைத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும் ஊடகவியலாளருமான தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி போட்டியிடவுள்ளார்.
நடக்கவிருக்கும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி. இதற்காக இரு கட்சிகள் என்னை வேட்பாளராக நிறுத்துவதற்கு அணுகியிருந்தன. இலங்கையில் உள்ள முக்கிய தேசியக் கட்சியொன்றும் வடக்கில் உள்ள அரசியல் கட்சியொன்றும் இவ்வாறு என்னைக் கேட்டுள்ளன. நான் எந்தக் கட்சியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றார். இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த போது அவருடன் இது தொடர்பான சந்திப்பொன்றை நடத்தியதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - 2013 நிர்வாக உறுப்பினர்கள் .
Canada - Old Students’ Association of Pungudutivu
கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - 2013
கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2013வது ஆண்டிற்கான பொதுக்கூட்டம் மார்ச் 31, 2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. மேற்படி பொதுக்கூட்டத்தில் நடப்பாண்டு நிர்வாகிகளாக அருண் குலசிங்கம்(தலைவர்), எஸ்.எம். தனபாலன்(செயலாளர்;), கதிர் மகாத்மன்(பொருளாளர்), மற்றும்; ஜம்போதரநாதன் விஸ்வலிங்கம்(உபதலைவர்), கைலையநாதன் கோபாலபிள்ளை(உபசெயலாளர்), மணிக்கவாசகர் தம்பிப்பிள்ளை(நாதன்)(உபபொருளாளர்), மற்றும் உறுப்பினர்களாக கருணாகரன் ஸ்ரீஸ்கந்தராசா, ரகுராம் சோமசுந்தரம், மார்க்கண்டு சுகுணேஸ்வரன், குமார மனேகரன், பிரபா நல்லதம்பி, விஜய் கார்த்திகேசு, சோமசுந்தரம் பசுபதிப்பிள்ளை(விசு), திருநாவுக்கரசு கருணாகரன், வடிவேல் நிமலகாந்தன், கணேசபிள்ளை கணேசலிங்கம் (தாசன்), சங்கரலிங்கம் சதானந்தலிங்கம், மயில்வாகனம் ஜெயகாந்தன், அனுராகரன் குலசேகரம்பிள்ளை, துரை ரவிந்திரன், கந்தையா மதியழகன், மற்றும் போசகர்களாக நல்லையா தர்மபாலன், சண் சதாசிவம், ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2013ம் ஆண்டிற்கான வருடாந்த ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் மோர்னிங்சைட் பார்க்கில் ஆகஸ்ட் 04இ2013 (யுரபரளவ 04இ2013) ஞாயிற்றுக்கிழமையன்று சங்கத்தின் முன்னாள் போசகர் அமரர் இராமலிங்கம் இராசையா அவர்களின் ஞாபகார்த்த திடலில் நடைபெறவுள்ளது. ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்களுக்கான அன்பளிப்புகள், மற்றும் புங்குடுதீவில் கல்விகற்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கான நிதியுதவிகளை வழங்க விரும்புவோர் இவ்வாண்டிற்கான நிர்வாகசபை உறுப்பினர்களிடம் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்.
தலைவர் செயலாளர் பொருளாளர்
அருண் குலசிங்கம் ளு.ஆ. தனபாலன் கதிர் மகாத்மன்
மேலதிக தொடர்புகளுக்கு:- 416-357-2847 647-290-5856 647-465-3720
25 ஏப்., 2013
தனுஷ் படப்பிடிப்பில் விபரீதம் :
2 துணை நடிகைகள் பலி
2 துணை நடிகைகள் பலி
நடிகர் தனுஷ் நடிக்கும் நையாண்டி படத்தை வாகை சூடவா படத்தை இயக்கிய எ.சற்குணம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பின்போது விபரீதம் ஏற்பட்டுள்ளது. இடமலையில் குளத்தில் மூழ்கி விஜி,சரசு என்ற 2 துணை நடிகைகள் உயிரிழந்தனர்.
சங்ககாரவிற்கு எதிர்த்து ஐதராபாத்தில் போராட்டம்!
தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்கள அரசினைக் கண்டிக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் இடம்பெற தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
24 ஏப்., 2013
திருநங்கைகளுக்கான அழகி போட்டிPhotos
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை – சேத்பட் செல்லும் வழியில் உள்ளது வேடந்தவாடி கிராமம். இக்கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா 22ந்தேதி தொடங்கியது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்துக்கொண்டனர்.
டுபாய் ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம்: 19 தமிழர்களின் நாடுகடத்தல் நிறுத்தப்பட்டது! 11 பேரை அமெரிக்கா உள்வாங்கியது!
டுபாயில் தஞ்சமடைந்திருந்த ஈழத்தமிழ் அகதிகளில் 19 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவர் என்ற நிலையில் தற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கம்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமானwww.news.lk இனந்தெரியாத நபர்களினாலேயே சற்று முன்னர் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் இலங்கையிடம் கோரியுள்ளது.
ஊடகவியலாளர் பாதுகாப்பு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியாக உன்னிப்பாக
நவ சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திராவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சரத் மனமேந்திராவிற்கு எதிராக பிடி விராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சரத் மனமேந்திரா தற்போது வெலிக்கடை பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.நாளைய தினம் சரத் மனமேந்திராவை, நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளதாக பொலிஸ் ஊடகக் காரியாலயம் அறிவித்துள்ளது.
தீர்வு காண விருப்பம்! ஆனால் துரோகிப் பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார்!- ஜனாதிபதி
பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வர முடியவில்லை. அரசாங்கத்துடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப் பட்டம் கட்டி விடுவார்கள். இதனால் தான் அவர் பேச்சுக்கு வர அஞ்சுகின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இரட்டைக் கொலை: ஸ்தம்பிதமடைந்த பாடசாலையை வழமைக்கு கொண்டு வரமுயற்சி!- கல்விப்பணிப்பாளர் பொதுமகன் மீது தாக்குதல்
செங்கலடியில் இடம் பெற்ற இரட்டைக் கொலையுடன் செங்கலடி மத்திய கல்லூரியைச் சோந்த நான்கு மாணவர்கள் சம்பந்தப்பட்டார்கள் என்பதற்காக முழுப் பாடசாலையையும் குற்றம் சாட்ட முடியாது என கிழக்கு மாகாண முன்னாள் முதுலமைச்சரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
23 ஏப்., 2013
னித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அது குறித்து விசாரணை நடாத்தத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அது குறித்து விசாரணை நடாத்தத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பிரபல பொருளியல் பாட ஆசிரியருமான எச்.எம்.எம்.பாக்கீர் மாணவியொருவரை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்ததாக அம் மாணவி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த குறித்த மாணவி காத்தான்குடியிலுள்ள பாக்கீர் ஆசிரியரின் மதினியின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த குறித்த மாணவி காத்தான்குடியிலுள்ள பாக்கீர் ஆசிரியரின் மதினியின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார்.
ஈழத்தமிழர்கள் துபாயிலிருந்து திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் – வைகோவிற்கு மன்மோகன்சிங் பதில்!
இது தொடர்பாக, ஏப்ரல் 6ம் திகதி, பிரதமரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வைகோ பேசினார். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக வைகோவிடம் பிரதமர் உறுதி அளித்தார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்,
வயலின் மேதை லால்குடி ஜெயராமன் காலமானார்
பிரபல வயலின் மேதையும், இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82.
பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர். சிருங்காரம் எனும் தமிழ் படத்திற்கு இசையமைத்ததற்காக தேசிய விருது கிடைத்தது. வாத்திய சங்கீத கலாரத்னா விருது வழங்கியது பாரதி சொசைட்டி நியூயார்க்.
பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர். சிருங்காரம் எனும் தமிழ் படத்திற்கு இசையமைத்ததற்காக தேசிய விருது கிடைத்தது. வாத்திய சங்கீத கலாரத்னா விருது வழங்கியது பாரதி சொசைட்டி நியூயார்க்.
இலங்கையில் மாநாடு நடத்தக் கூடாது: காமன்வெல்த் நடவடிக்கை குழுவுக்கு கலைஞர் வேண்டுகோள்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை ராணுவத்தினரிடமிருந்து தப்பித்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்து கடல் கடக்கும் ஈழத் தமிழர்கள் பல நாட்டு ராணுவத்தினரிடம் பிடிபடுகிறார்கள்.
வெளிநாட்டு பணத்திற்கு ஆசைப்பட்டு முதியோர் இல்லத்திருந்தவரை சகோதரி என அழைத்துச் சென்ற பெண்
யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த வயோதிபப் பெண் ஒருவரை அவரது சகோதரி எனக் கூறி அடையாளப்படுத்திய மற்றொரு வயோதிப மாது, அவரை அழைத்துச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் மீண்டும் வயோதிபர் இல்லத்திலேயே அவரைக் கூட்டி வந்து விட்டுச் சென்றுள்ளார்.
'கண் பார்வை இருப்பதற்குள், எனக்கு சக்தி இருப்பதற்குள் என் மகனைத் திரும்பக் கொடுங்கள்"!- பேரறிவாளனின் தாய் கதறல்
“எனக்கு கண் பார்வை இருப்பதற்குள், என் உடம்பில் சக்தி இருப்பதற்குள் என் மகனைத் திரும்பக் கொடுங்கள். அவன் வாழ வேண்டியவன்” என ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதியான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வன்னிப் போரில் கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும்!- வவுனியா வைத்தியசாலையில் இராணுவச் சிப்பாய் அட்டகாசம்
வன்னியில் நடைபெற்ற போரில் தமிழர்களை கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும் என பொது மக்கள் மத்தியில் மிக மோசமாக சிங்கள இனவாதத்தைக் கக்கிய இராணுவச் சிப்பாய் ஒருவர் வைத்தியர் உட்பட மூவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
22 ஏப்., 2013
தொடர்ந்தும் அரசாங்கம் நழுவ முடியாது! எம்ரிவி- எம்பிசி ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து ஸ்ரீரங்கா
தொடர்ந்தும் அரசாங்கம் நழுவல் போக்கை மேற்கொள்ள முடியாது. இவ்வாறு எம்ரிவி- எம்பிசி நிறுவன ஊடகவியலாளர்கள் மீது விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா
சந்திரிகா தொடர்பில் கடும் அச்சத்தில் அரசு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் ஜனாதிபதி
சுவிட்சர்லாந் பேர்ண் மாநகரில் த்ரிஷா ஜீவா பங்குபற்றும் படப்பிடிப்பு
ஜீவா ,த்ரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை என்ற படத்துக்கான படபிடிப்பு இன்று சுவிஸ் பேர்ண் நகரில் அமைந்துள்ள டிஸ்கோ கடை ஒன்றில் நடைபெற்றது ஏராளமான தமிழர்கள் நடிகர்களை காண குவிந்திருந்தனர் நடன இயக்குனர் ராஜு சுந்தரத்தின் குழுவினர் காட்சிகளை ஒழுங்கமைத்து படமாக்கினர்
ஜீவா ,த்ரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை என்ற படத்துக்கான படபிடிப்பு இன்று சுவிஸ் பேர்ண் நகரில் அமைந்துள்ள டிஸ்கோ கடை ஒன்றில் நடைபெற்றது ஏராளமான தமிழர்கள் நடிகர்களை காண குவிந்திருந்தனர் நடன இயக்குனர் ராஜு சுந்தரத்தின் குழுவினர் காட்சிகளை ஒழுங்கமைத்து படமாக்கினர்
முள்ளிவளையில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரை: அமைச்சர் றிசாட்டின் அடியாட்கள் அடாவடித்தனம்
முள்ளிவளை மத்தியில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்களின் வீடுகளை தீக்கிரையாக்கி அமைச்சர் றிசாட் தன்னுடைய கோரத்தாண்டவத்தை இன்று அதிகாலை ஆடியுள்ள நிலையில், முள்ளியவளையிலிருந்து தமிழர்களை விரட்டியடிக்கும்
21 ஏப்., 2013
அமெரிக்க அழைப்பை நிராகரிக்க மீண்டும் வெளியிடப்பட்ட அறிக்கை!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு, அரச படையினர் காரணமல்ல என்று இராணுவ நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக, கடந்த 10ம் திகதி இராணுவத் தலைமையகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது.
20 ஏப்., 2013
சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம் பாலஸ்தானம் செய்யப் பட்டு முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த தே .அத்தோடு புதிய ராஜகோபுரமும் அமைக்கப்பட்டும் வருகின்றது .இந்த ஆலயத்தின் திருபணிக்கென சுவிசில் ஏராளமான தமிழ் நெஞ்சங்கள் நிதிப் பங்களிப்பை செய்து வருகின்றார்கள்.பெரிய நகரங்களில் உங்களை நாம் அணுகி இந்த நிதிப் பங்களிப்பை பெற்றுக் கொண்டாலும் ஏனைய நகரங்களில் உங்கள் இல்லங்களுக்கு வர முடியாத கஷ்டமான சூழலில் நாம் இருக்கிறோம் .எமது இயந்திரமயமான வாழ்க்கை முறையில் இது சாத்தியபப்படாத விசயமும் கூட.ஆதலால் இந்த திருப்பணிக்கு உதவ நீங்களாகவே வந்து தொடர்பு கொண்டு பங்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் ,மேற்படி திருப்பணி வேலைகள் யாவும் அண்மையில் கனடாவில் இருந்து தாயகம் திரும்பி நகேயே வாழும் அ .சண்முகநாதன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெறுகின்றன.
தொடர்புகளுக்கு
அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை ) 031 951 33 81
www .madathuveli .net
www .pungudutivuswiss .com
தினத்தந்தி அதிபர்
சிவந்தி ஆதித்தன் காலமானார்
சிவந்தி ஆதித்தன் காலமானார்
தினத்தந்தி அதிபர் சிவந்தி பா.சிவந்தி ஆதித்தன் (76) சென்னையில் இன்று காலமானார். கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிர் பிரிந்தது.
சென்னை பெசண்ட் நகரில் சிவந்தியின் இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் நடக்கிறது.
1958ம் ஆண்டு முதல் பத்திரிகை துறையில் பணியாற்றியவர் சிவந்தி ஆதித்தன். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியும் வகித்தார் சிவந்திஆதித்தன்.
ஊசி ஏற்றப்பட்டு அரை மணி நேரத்தில் உயிரிழந்தார் தாய்!- யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்!இந்தச் சம்பவத்தில் புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த விஜயரட்ணம் நிர்மலாதேவி (வயது 37) என்பவரே உயிரிழந்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் ஊசி ஏற்றச் சென்ற இளம் தாய் ஊசி ஏற்றப்பட்டு அரை மணிநேரத்தில் உயிரிழந்தார். ஊசி போடப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார்
யாழ். போதனா வைத்தியசாலையில் ஊசி ஏற்றச் சென்ற இளம் தாய் ஊசி ஏற்றப்பட்டு அரை மணிநேரத்தில் உயிரிழந்தார். ஊசி போடப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார்
சுரேஷ் எம்பியிடம் இரண்டு மணி நேரம் கடும் விசாரணை! (2ஆம் இணைப்பு)
இலங்கை இராணுவம் தொடர்பில் நாம் ஏதாவது கருத்துக்களை தெரிவித்தால் விசாரணைகளுக்கு உட்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின்
சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது!
14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சங்கானையைச் சேர்ந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.நாவற்குழிப்பகுதியில்
பெண்கள், சிறுமியர் இல்லங்களில் ஆண்கள் பணிக்கு வேண்டாம் – யாழ்.அரச அதிபர்!யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுமியர்களைக் கொண்டு இயங்கும் இல்லங்கள், நிறுவனங்களில் ஆண்களைப் பணிக்கு அமர்த்த வேண்டாம் என யாழ் மாவட்ட அரசாங்க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)