புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2013


முதலையுடன் குத்துச் சண்டை ! உயிர் தப்பும் போராட்டம்

ABC NEWS நிறுவனத்திற்கு இவர் அளித்த செவ்வியில் ” நான் எனது படகிலிருந்து குதித்து ஒரு நான்கு அல்லது ஐந்து மீற்றர்கள் நீந்தியபோது பெரும் கல்லொன்றினால் என் தலையில் அடித்தது போல் இருந்தது. அது என்னை இழுத்துச் சொல்ல முயன்ற போதே அதன் சக்தியிலிருந்து அது ஒரு முதலை என்பதை உணர்ந்து கொண்டேன். உடனடியாக எப்படியும் போராடி என் உயிரைக் காக்க வேண்டும் என்பதை முடிவு செய்தேன். எனது மேற்பக்க உடலை இடதுடது பக்கத்தால் கவ்வி இழுத்துச் சென்றது. என் பலம் கொண்ட மட்டும் முதலையின் மீது குத்தத் தொடங்கினேன். பெரும் போராட்டத்தின் பின்னர் முதலை களைத்ததும் என்னை விடுவித்தது. நல்ல வேலையாக இது பெரிய முதலையாக இருக்கவில்லை. இருந்திருந்தால் எனது தலையைத் தனியே கொண்டு சென்றிருக்கும்” என்று கூறியுள்ளார்.
ஒருவாறாகக் கரைக்கு நீந்தி வந்த இவர் பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். கழுத்திலும் முதுகிலும் முதலை கடித்த காயங்கள் உள்ளன.

ad

ad