புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2013

பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை ஜாகுலின் பெர்ணான்டஸ் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியில் இயக்கி வரும் “ராமைய்யா வொஸ் தாவைய்யா” என்ற படத்தில் தான் ஜாகுலின் பெர்ணான்டசை ஒப்பந்தம் செய்துள்ளார். 


இந்த படத்தில் கிரிஷ்குமார் நாயகனாகவும், ஸ்ருதி ஹாசன் நாயகியாகவும் நடிக்கின்றனர். இரண்டாவது கதாநாயகியாக ஜாகுலின் பெர்ணான்டசை தேர்வு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. படத்தை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார். 

இலங்கையில் தமிழர்களை கொன்று இனப் படுகொலையில் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசுக்கு எதிராக தமிழ கத்தில் பேராட்டங்கள் நடந்து வருகிறது. இங்கு சுற்றுலா வரும் சிங்களர்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். இலங்கையில் இசை கச்சேரிகளுக்கு செல்வதை பாடகர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் சிங்கள நடிகையை தனது படத்தில் பிரபுதேவா நடிக்க வைப்பதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. 

ad

ad