புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2013


பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை இலங்கை தடுக்கவேண்டும்!- மனித உரிமை கண்காணிப்பகம்
பர்மா - அரகான் மாநிலத்தில் இடம்பெறுகின்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை வலியுறுத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது
.
இந்த பகுதியில் முஸ்லிம்களை பர்மாவின் அதிகாரிகளும், அரகானிஸ் என்ற அடிப்படை வாத அமைப்பின் உறுப்பினர்களும் சேர்ந்து பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆட்படுத்துகின்றனர்.
அண்மையில் முஸ்லிம் குழு ஒன்றை படகில் இருந்து கடலில் தள்ளிவிட்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு இலங்கையின் அதிகாரிகள் சாட்சியாளர்களாக உள்ளனர்.
எனவே பர்மாவில் இடம்பெறுகின்ற வன்முறைகளைத் உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ad

ad