-

20 ஏப்., 2013



சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் 
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம் பாலஸ்தானம் செய்யப் பட்டு முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த தே .அத்தோடு புதிய ராஜகோபுரமும் அமைக்கப்பட்டும் வருகின்றது .இந்த ஆலயத்தின் திருபணிக்கென சுவிசில் ஏராளமான  தமிழ் நெஞ்சங்கள் நிதிப் பங்களிப்பை செய்து வருகின்றார்கள்.பெரிய நகரங்களில் உங்களை நாம்  அணுகி இந்த நிதிப் பங்களிப்பை பெற்றுக் கொண்டாலும் ஏனைய நகரங்களில் உங்கள் இல்லங்களுக்கு வர முடியாத கஷ்டமான சூழலில் நாம் இருக்கிறோம் .எமது இயந்திரமயமான  வாழ்க்கை முறையில் இது சாத்தியபப்படாத விசயமும் கூட.ஆதலால் இந்த திருப்பணிக்கு உதவ  நீங்களாகவே  வந்து தொடர்பு கொண்டு பங்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் ,மேற்படி திருப்பணி வேலைகள்  யாவும் அண்மையில் கனடாவில் இருந்து தாயகம் திரும்பி நகேயே வாழும் அ .சண்முகநாதன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெறுகின்றன.

தொடர்புகளுக்கு

அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை ) 031 951 33 81

www .madathuveli .net
www .pungudutivuswiss .com




















ad

ad