கள்ளக்காதலி வீட்டில் சிக்கிய போலீஸ்காரர்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும், சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள கே.வி.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
அந்த பெண்ணின் கணவர் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தார். அவர் இல்லாத நேரம் பார்த்து அந்த போலீஸ்காரர் கே.வி.ஆலங்குளம் சென்று கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்து வந்தார். போலீஸ்காரர் அடிக்கடி வந்து செல்வதை அக்கம்பக்கத்தினர் நோட்டமிட்டனர்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் போலீஸ்காரர் கள்ளக்காதலி வீட்டுக்கு வந்தார். வீட்டிற்குள் சென்றதும் இருவரும் கதவை பூட்டிக் கொண்டனர். இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் சுப்பிரமணியபுரம் பட பாணியில் வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டினர்.
பின்னர் சேர்ந்தமரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி கையும் களவுமாக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பினர். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும், சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள கே.வி.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
அந்த பெண்ணின் கணவர் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தார். அவர் இல்லாத நேரம் பார்த்து அந்த போலீஸ்காரர் கே.வி.ஆலங்குளம் சென்று கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்து வந்தார். போலீஸ்காரர் அடிக்கடி வந்து செல்வதை அக்கம்பக்கத்தினர் நோட்டமிட்டனர்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் போலீஸ்காரர் கள்ளக்காதலி வீட்டுக்கு வந்தார். வீட்டிற்குள் சென்றதும் இருவரும் கதவை பூட்டிக் கொண்டனர். இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் சுப்பிரமணியபுரம் பட பாணியில் வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டினர்.
பின்னர் சேர்ந்தமரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி கையும் களவுமாக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பினர். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.