கமரொனின் காலக்கெடுவுக்குள் எதையும் செய்ய முடியாது – சிறிலங்கா அதிபர் ஆவேசம் |
பிரித்தானியா கோருவது போன்று எந்தவொரு காலக்கெடுவுக்குள்ளேயும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த முடியாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
-
19 நவ., 2013
இசைப்பிரியா படுகொலை: அனைத்துலக விசாரணை கோரும் ரொறன்ரோ குடும்பம் – கனேடிய ஊடகம் |
சிறிலங்காப் படையினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது தொடர்பான காணொலி வெளியான பின்னர், ரொறன்ரோவில் உள்ள அவரது உறவினர்களின் குடும்பம், அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாக, கனடாவில் இருந்து வெளியாகும் நசனல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. |
இலங்கை விஜயம் தொடர்பில் பிரி. பாராளுமன்றில் உரையாற்றிய பிரி. பிரதமர் டேவிட் கமரூன்
இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழ் மக்களையும் சந்தித்தமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் இலங்கை தொடர்பாக இன்று அவர் பிரித்தானிய பாராளுமன்றில் உரையாற்றியுள்ளார்.
மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள தமது காணிகளில் குடியேற சிலர் தடை விதிப்பதாகவும் தமது காணியில் குடியேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து மண்முனைப்பற்றில் உள்ள சில முஸ்லிம் மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இசைப்பிரியாவின் கொலையில் தவிற்கமுடியாதது நியாயப்படுத்துகிறார் கருணா கருணாவின் மனைவி நிரோ என்ற வித்தியாவதி கணவன் பற்றி கூறியவை
தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும்கருணா தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக அவரது மனைவிவித்தியாவதி தெரிவித்துள்ளார்.கருணாவின் மனைவியும் மூன்றுகுழந்தைகளும் சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் வசித்து வந்தனர்,தற்போது
18 நவ., 2013
எதற்கும் அஞ்சமாட்டோம்! ஐ.நாவில் எத்தகைய சவால்கள் வந்தாலும் எதிர்கொள்வோம்: மஹிந்த சமரசிங்க
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இலங்கை தயாராகவுள்ளதாக மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
நிந்தவூரில் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல்! டயர்கள் எரிப்பு: கர்த்தால் அனுஸ்டிப்பு - விசேட அதிரடிப்படையினரின் பொறுப்பற்ற நடவடிக்கையே பதட்டத்திற்கு காரணம்: ஹரீஸ்
அம்பாறை, நிந்தவூர் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டதையடுத்து, துப்பாக்கிப் பிரயோகச் சத்தம் கேட்பதாகவும் தொடர்ந்து பதற்றமான நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எதற்கும் அஞ்சமாட்டோம்! ஐ.நாவில் எத்தகைய சவால்கள் வந்தாலும் எதிர்கொள்வோம்: மஹிந்த சமரசிங்க
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இலங்கை தயாராகவுள்ளதாக மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
பிரித்தானிய பிரதமர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் – முரளீதரன்
பிரித்தானிய பிரதமரை சிலர் பிழையாக வழிநடத்தி வருவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்ததாவது,
என்னைப் பொருத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அதிலிருந்து அகல முடியவில்லை யாராலும். போர்க்காலத்தில் ஐநா பிரதிநிதிகளுடன் நானும் அந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறேன்.ஆனாலும் வசதிகள் வேண்டும். இப்போது சாலைகள் போடப்பட்டுள்ளன, பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.வர்த்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. வடக்கு முன்னேறி வருகிறது.
வடக்கு கிழக்கு நிலைமைகளை நேரில் பார்வையிடாது சிலரது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பிரித்தானிய பிரதமர் சரி அல்லது பிழை என எமக்கு குறிப்பிட முடியாது. பிரதமர் கமரூன் ஒரு நாள் மட்டுமே வடக்கிற்கு விஜயம் செய்துள்ளார் என்றார்.
சுற்றலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர் சமநிலையில் நிறைவு பெற்றது.
தம்புள்ளை ரங்கிரிய விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டி மழை காரணமாக இடைக்கிடையே பாதிப்புக்கு உள்ளானது.
இந்த நிலையில், போட்டி 33 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 33 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றது.
கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நாளை திங்கட்கிழமை காலை உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.
இதன்போது சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்முனைக்குடி ஜும்ஆப் பள்ளியில் இருந்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு- கல்முனை மாநகரசபையில் அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் போன்றவை மேற்கொண்டுள்ளன.
17 நவ., 2013
இலங்கை விசாரிக்காவிட்டால் ஐநா மன்ற விசாரணை கோருவோம்--கேமரன் BBC
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கை மார்ச் மாதத்துக்குள் சுயாதீனமான ஒரு விசாரணையை அமைக்காவிட்டால், பிரிட்டன், இது தொடர்பாகhttp://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131116_cameronvideo.shtml ஒரு சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐநா மன்றத்திடம் கோரும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் எச்சரித்திருக்கிறார்.
16 நவ., 2013
நாட்டை அவமானப்படுத்தும் திரைப்படங்களை தயாரிக்க நாடு முழுவதும் படப்பிடிப்புகளை நடத்தும் சனல்4 குழுவினர்: பாதுகாப்பு தரப்பினர்
இலங்கை வந்துள்ள சனல்4 தொலைக்காட்சியின் ஊடக குழுவினர், இலங்கை அவமானத்திற்கு ஏற்படுத்தும் வகையில் மேலும் பல ஆவணப்படங்களை தயாரிப்பதற்கு நாடு முழுவதும் ஒளிப்பதிவுகளை செய்துள்ளமை தமக்கு தெரியவந்துள்ளதாக அரச பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
முற்றம் குற்றம்.. யுத்தம்! நடராஜன் மீது கோபம் இருந்தால், அதனை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீதா காட்டவேண்டும் [ விகடன் ]
இது நவம்பர் மாதம். ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் மாதம். அப்படிப்பட்ட மாதத்தில்,
23 ஆவது பொதுநலவாய உச்சி மாநாடு கோலாகல ஆரம்பம்
கலாசார பாரம்பரியங்களுடன் தலைவர்கள் வரவேற்பு
பொதுநலவாய அரச தலைவர்களின் 23வது உச்சி மாநாடு நேற்று கோலா கலமாக கொழும்பில் ஆரம்பமானது. உச்சி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கிலும் அரச தலைவர்கள் கலந்து கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ அமர்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும்
வேடிக்கையான பேச்சாக இருக்கிறது இளவரசர் சார்ள்ஸின் பொறுப்பற்ற பேச்சு. "உலகில் உள்ள பிரச்சினைகளை நினைவுபடுத்திக்கொண்டிருக்க தேவையில்லை எனவும் மாறாக அவற்றுக்கு தீர்வினை பெற பொதுநலவாய அமைப்பு முயற்சிக்க வேண்டும்" எனவும் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளமையானது ஆழமற்ற சிந்தனையாகவே தோன்றுகின்றது. நினைவுபடுத்தாமல் எப்படி தீர்வு தேடுவீர்கள் இளவரசரே? தீர்வைப்பற்றி நீங்கள் முன்வைக்கும் போதே எதற்கான தீர்வு என்று சொல்ல வேண்டும் அல்லவா? அத்தோடு உங்கள் மனசாட்சிக்கே தெரிகிறது இங்கே மருந்து தேவைப்படும் காயங்கள் இருக்கின்றன என்று அதனால் தான் தீர்வு பற்றி மேலோட்டமாக சொல்கிறீர்கள்! கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை. வலி சுமந்த மனிதர்களுக்கு தான் தெரியும் வலி என்றால் என்ன என்று...இல்லையேல் நெஞ்சில் துளியாகவேனும் ஈரம் இருக்க வேண்டும்...உங்களுக்கு எங்கே புரியும் எம் இனத்தின் கொடும் துயரம் பற்றி?
http://www.facebook.com/ l.php?u=http%3A%2F%2Fwww.tamilc nn.org%2Farchives%2F217234.htm l&h=TAQEnycAX
இலங்கையில் சனல் 4- ன் இயக்குனர் கல்லாம் மேக்ரோ-வை கொலை செய்ய அரசின் சதி அம்பலம் வீடியோ
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதால் பல்வேறு நாட்டிலிருந்தும் தொலைக்காட்சி சேனல்கள் இலங்கையில் தஞ்சம் அடைந்துள்ளன. இதில் முக்கியமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சேனல்-4, இலங்கையின் இனவெறி செயல்களை உலகறிய செய்த சேனல். இந்த சேனல் அலைவரிசைக்கு தடைவிதித்தால் மேலும் பெரிய பிரச்சனை எழும் என்பதால் இலங்கை அரசு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
லண்டனில் இருந்து கொண்டே இலங்கைக்கு பெரிய
பொல்லு கொடுத்து அடி வாங்க போகும் இலங்கை ஜனாதிபதி
பொதுநலவாய மாநாடு நடத்தி தன்மீதான குற்றச் சாட்டுகளை மறைக்கலாம் அல்லது மறுக்கலாம் என கனவு கண்ட மஹிந்த பொல்லு கொடுத்து அடி வாங்கிய கதை ஆரம்பிகிறது .வந்திருந்த அனைத்து தலைவர்களும் ஊடகங் களும் வடக்கு நோக்கி செல்வதையே முக்கிய நோக்காக கொண்டுள்ளன . அரசோ தனது கட்டுபாட்டை இழந்து தவிக்கிறது இங்கிலாந்து பிரதமர் ஒருவர் 48 வருடங்களின் பின்னர் விஷயம் போன கமரூன் தமிழரின் நலன்புரி நிலையத்தின் சிறிய தகர கொட்டகைகளில் காண பாடும் கா ட்சிகள் அவரின் மனித காருண்யத்தை விளக்குகின்றன தான் எதற்காக போகிறேன் என்று சொன்னவர் செய்து காட் டுகிறார் சிறிய நாட்டின் ஜனாதிபதி மகிந்த பெரியபலமான நாடான இங்கிலாத்தில் இறங்க முடியாத நிலை.பெரிய நாடான இங்கிலாந்தின் பிரதமர் தகர கொட்டகையில் என்ன வித்தியாசம்
பிரி. பிரதமர் வருகையை எதிர்த்து சிங்களவர்கள் சுன்னாகத்தில் போராட்டம்!- மாவிட்டபுரம் போராட்ட மக்களை சந்திக்காமல் பிரதமர் கொழும்பு திரும்பினார்
சுன்னாகம் பகுதியில் சிங்கள மக்களால் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு வருகை தந்த பிரிட்டிஷ் பிரதமர் அந்த நிகழ்வுடன் மீளவும் கொழும்பு திரும்பியுள்ளார்.
சனல்- 4 ஊடகவியலாளர்களையே கண்ணீல் மல்க வைத்தது மக்களின் அழுகுரல்! சர்வதேச விசாரணை தேவையென்கிறார் ரவிகரன்
தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய உறவுகளைத் தொலைத்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியது மாபெரும் குற்றமாகும். இச்சம்பவம் உட்பட தமிழர்கள் மேல் புரியப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பிலும் சுயாதீன சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ச
பிரித்தானிய பிரதமர் கமரூன் யாழ். நலன்புரி நிலையத்திர்கு விஜயம். - ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார்
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
15 நவ., 2013
பிரத்தானிய பிரதமர் உதயனுக்கு விஜயம்
யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தார்.
தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தக் கோரும் கையொப்பங்கள் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சிடம் கையளிப்பு |
[ சண்தவராசா ] |
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கு எதிராக பக்கச் சார்பற்ற நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும், தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திச் சேகரிக்கப்பட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய படிவங்கள் வியாழன் பிற்பகல் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. |
போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த மக்கள் மீது கழிவொயில், கல்வீச்சு தாக்குதல்: இராணுவத்தினர் அட்டகாசம்
வலி.வடக்கில் மேற்கொள்ளப்படும் நில மீட்புப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்கென யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட மக்கள் மீது இராணுவத்தினர் ஒயில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு பல இடங்களில் வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
யாழ். நூலகத்திற்கு முன்பாக பதற்றம் - அனைத்துலக பிரசன்னத்தின் முன் கண்ணீர் மல்க காத்திருந்த மக்கள் மீது காட்டுமிராண்டித்தனம்!
கே.பியிடம் விசாரணை நடத்த இலங்கையிடம் உத்தியோகபூர்வ பதிலை எதிர்பார்த்திருக்கும் சி.பி.ஐ!- இந்துஸ்தான் டைம்ஸ்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடனான தொடர்புகள் பற்றி கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடம் முறையான விசாரணைகளை நடத்த இந்திய மத்திய விசாரணை பிரிவினர் (சி.பி.ஐ) இலங்கையின் உத்தியோகபூர்வமான பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ்
எனது தனிப்பட்ட பார்வையில் நல்ல கவி வீச்சு ,கரு ப்பொருள், கோர்ப்பு ,பொருள் கூறல் ,பா வம் ,காலத்துக்கு ஏற்ற படைப்பு போன்ற அம்சங்கள் இருந்தும் எனக்கு பிடிக்காத ஊடக நாகரீகம் குறைவாக இருக்கிறது.விதிவிலக்காக இந்த கவிஞனின் ஆற்றலுக்கு மதிப்பளித்து சேர்த்துக் கொள்கிறேன்
முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்!
ஆக்கம்: அ.பகீரதன்
இடித்தவன் தலையில்
இடி வீழாதோ-சிறை
பிடித்தவன் அரசின்
முடி தாழாதோ?
படைத்தவன் இல்லையோ-இல்லை
பார்ப்பனர் தொல்லையோ
உடைத்தவன் உதிரத்தை
குடித்தால் தகுமோ?
அம்மா..
முற்றத்தை இடித்தாயோ–உன்
முகத்திரையை கிழித்தாயோ?
சுற்றத்தை வெறுத்தாயோ-உன்
சுகத்தை நினைத்தாயோ?
முந்தானை விரித்து-அரசியலில்
முன்னுக்கு வந்தவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
மு.க.வின் மாளிகையா?
பல் இளித்து பாவாடை குறுக்கி
சினிமாவில் வென்றவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
சினிமா செற்றா
அம்மா
வாஸ்த்து பார்த்தீரோ
வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ
நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு
சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ
பார்ப்பனரே…
பல்லக்கில் பவனிவந்த
தமிழன் இன்று
உங்கள் சொல்கேட்டு
பள்ளத்தில் வீழ்ந்தானே
முல்லைக்குத் தேர் கொடுத்த
தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு
முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க
ஒருதுண்டு துணியில்லை
வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு
வீடுநிலமும் விதைநிலமும்
கொடுத்த தமிழனுக்கு
நினைவுக்கல் நாட்ட நிலமில்லை
நன்றி.
அ.பகீரதன்
முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்!
ஆக்கம்: அ.பகீரதன்
இடித்தவன் தலையில்
இடி வீழாதோ-சிறை
பிடித்தவன் அரசின்
முடி தாழாதோ?
படைத்தவன் இல்லையோ-இல்லை
பார்ப்பனர் தொல்லையோ
உடைத்தவன் உதிரத்தை
குடித்தால் தகுமோ?
அம்மா..
முற்றத்தை இடித்தாயோ–உன்
முகத்திரையை கிழித்தாயோ?
சுற்றத்தை வெறுத்தாயோ-உன்
சுகத்தை நினைத்தாயோ?
முந்தானை விரித்து-அரசியலில்
முன்னுக்கு வந்தவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
மு.க.வின் மாளிகையா?
பல் இளித்து பாவாடை குறுக்கி
சினிமாவில் வென்றவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
சினிமா செற்றா
அம்மா
வாஸ்த்து பார்த்தீரோ
வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ
நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு
சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ
பார்ப்பனரே…
பல்லக்கில் பவனிவந்த
தமிழன் இன்று
உங்கள் சொல்கேட்டு
பள்ளத்தில் வீழ்ந்தானே
முல்லைக்குத் தேர் கொடுத்த
தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு
முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க
ஒருதுண்டு துணியில்லை
வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு
வீடுநிலமும் விதைநிலமும்
கொடுத்த தமிழனுக்கு
நினைவுக்கல் நாட்ட நிலமில்லை
நன்றி.
அ.பகீரதன்
மனித உரிமை மீறல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டும்: கொமன்வெல்த் நாடுகளுக்கு வலியுறுத்து
இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டை கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மெக்ரேயை மங்கள சந்தித்தமையானது டி.எஸ்.சேனநாயக்கவின் கன்னத்தில் அறைந்ததுக்கு சமம்: அரசாங்கம்
இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக பிரசாரம் செய்யும் கெலும் மெக்ரேயை ஐ.தே.கட்சி எம்.பி மங்கள சமரவீர அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் சந்தித்தமையானது தேசப்பற்று கொண்ட டி.எஸ்.சேனநாயக்கவின் 'கன்னத்தில் அறையும்" செயலாகும்
14 நவ., 2013
மும்பை டெஸ்ட்: ரசிகர்கள் ஆரவாரத்துடன் களமிறங்கிய சச்சின்!
மும்பையில் இன்று நடந்த மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்தது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் களம் இறங்கி 38 ரன்களுடன் ஆட்டம் இழக்கமால் உள்ளார்.
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறைக்க முயற்சி ; சர்வதேச மன்னிப்பு சபை
பொது சமூகத்தில் காணப்படுகின்ற அச்சுறுத்தல்களை நீக்கி அதனை முடிவுக்கு கொண்டு வர பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)