புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2013

நடிகர் குள்ளமணி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

சென்னை கே.கே.நகரில் உள்ள அண்ணாநகரில் வசித்து வருபவர் நடிகர் குள்ளமணி (வயது 61). இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் சுப்பிரமணி. நடிப்புத்துறையில்
நுழைந்த பின் குள்ளமணி என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார்.  மை டியர் மார்த்தாண்டன், பணக்காரன், கரகாட்டக்காரன், நவாப் நாற்காலி உள்பட கிட்டத்தட்ட 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


இவருக்கு ராணி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊர் சென்றிருந்தார். இந்த நிலையில் குள்ளமணி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டார்.
திங்கட்கிழமை காலை வெகு நேரம் ஆகியும் அவரால் எழும்ப முடியவில்லை. வீட்டின் கதவு வெகுநேரம் திறக்கப்படாததை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்த போது குள்ள மணி மயங்கிய நிலையில் கிடந்தார்.
கவலைக்கிடமாக இருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. சிறுநீரகம் செயல் இழந்து காணப்படுவதால் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ad

ad