புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2013

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டேன் : முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு அழைப்புக் கிடைத்தாலும் செல்லமாட்டேன் என வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நேற்றுத் தெரிவித்தார்.
எமது மக்களின் பிரச்சினைகளை எம்மவர்களிடம் கூறியும் தீர்வு கிடைக்காமையினால் சர்வதேசத்திலிருந்து வருபவர்களிடம் இதனை எடுத்துக்கூறி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயற்சிக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
வலி.வடக்கில் மீள்குடியேற்றமாறு கோரி அம்மக்கள் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய முன்றலில் மேற்கொண்டு வருகின்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இரண்டாம் நாளான நேற்று இப் போராட்டத்தில் கலந்துகொண்டு மக்களுடன் உரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் விடயங்களை நேரில் கேட்டறிந்து கொண்ட முதலமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
 
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் தம்மைத்தமது சொந்த நிலங்கிளில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.
 
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், எமது மக்களின் பிரச்சினைகளை எம்மவர்களிடம் எடுத்துக்கூறிய பொழுதிலும் நீதியான தீர்வுகள் கிடைக்காமையினால் தற்பொழுது மக்களின் பிரச்சினைகளை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துக்கூறி வருகின்றோம்.

ad

ad