புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2013

நாட்டை அவமானப்படுத்தும் திரைப்படங்களை தயாரிக்க நாடு முழுவதும் படப்பிடிப்புகளை நடத்தும் சனல்4 குழுவினர்: பாதுகாப்பு தரப்பினர்
இலங்கை வந்துள்ள சனல்4 தொலைக்காட்சியின் ஊடக குழுவினர், இலங்கை அவமானத்திற்கு ஏற்படுத்தும் வகையில் மேலும் பல ஆவணப்படங்களை தயாரிப்பதற்கு நாடு முழுவதும் ஒளிப்பதிவுகளை செய்துள்ளமை தமக்கு தெரியவந்துள்ளதாக அரச பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
சனல்4 தொலைக்காட்சியின் ஊடக குழுவினர் அதி நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய சிறிய ரக கெமராக்களை கொண்டு நாட்டின் பல பகுதிகளில் ஒளிப்பதிவுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த புதன் கிழமை கிளிநொச்சி நோக்கிச் சென்ற ரயிலில் ஏறுவதற்கு முன்னதாக ரயில் நிலையத்திற்கு எதிரில் விழுந்து கிடந்த தமிழ் பெண்ணொருவரை இந்த ஊடக குழுவினர் படம் பிடித்துள்ளனர். படம் பிடித்து முடிந்ததும் அந்த பெண் அங்கிருந்து எழுந்து சென்றுள்ளார்.
எவ்வாறாயினும் இவ்வாறான படப்பிடிப்புகளை தடுத்து நிறுத்த சட்டத்தில் அதிகாரங்கள் இல்லை என பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

ad

ad