நாமக்கல் தொழிற்சாலையில் இருந்து 59 சத்தீஸ்கர் மாநிலபெண் கொத்தடிமைகள் மீட்பு
நாமக்கல் அருகே உணவுப்பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் கொத்தடிமை களாக பணியமர்த்தப்பட்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த
59 பெண் தொழிலாளிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கையால் திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.உரிய சம்பளம் வழங்காமல் அதிகப்படியான நேரம் பணியில் ஈடுபடுத்தி வந்த அந்த தொழிற்சாலையின் உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.