புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2013

ஆட்டோ 300 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: 3 பேர் பலி இருவர் காயம்
 

பண்டாரவளை, கும்பல்வெல அஸபுவ சந்தியில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் மூவர் உயிரிழந்துள் ளதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித் தனர்.

ஆட்டோவில் பயணித்த மூன்று பெண்களே இவ்வாறு இறந்துள்ளதோடு இவர்கள் 40 மற்றும் 50 வயதுடையவர்கள் என அறியப்படுகிறது.
ஐவர் பயணம் செய்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டும் விலகி 300 மீற்றர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றது.
ஆட்டோ சாரதியும் மற்றொரு நபரும் படுகாயமடைந்து பதுளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இறந்த பெண்கள் மூவரதும் சடலம் அடையாளங்காணப்படாத நிலையில் தெமோதர ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

ad

ad