புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2013

டீ விற்றவர் தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்: ராஜ்நாத்சிங்
பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜகவின் இந்தியாவை வெல்லசெய்வோம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜகவின் தேசியத்தலைவர்
ராஜ்நாத்சிங் பேசியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியில் வறுமை, வேலையில்லாமை போன்ற பல்வேறு பிரச்னைகள் தலைவிரித்தாடுகின்றன. அதேபோல காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் விண்ணை முட்டும் அளவுக்கு பரந்துவிரிந்துள்ளது. இப்பிரச்னைகளில் இருந்துவிடுபடவேண்டுமானால், காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் தலையாய நோக்கமாக உள்ளது. 
நாட்டின் எல்லையில் நமது வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுவீழ்த்தினாலும், எல்லைப்பகுதியில் சீனா அக்கிரமித்தாலும் பிரதமர் மன்மோகன்சிங் மௌனம் காப்பதை தவிர, உறுதியான பதிலடி கொடுக்க தவறிவிட்டார். சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் அதிலிருந்து மீண்டும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி பாராட்டும்படி இல்லை. தேனீர் விற்றவர் பிரதமர் ஆகமுடியாது என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார். தேனீர் விற்றவர் தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என்றார்.

ad

ad