புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2013

டெண்டுல்கரின் 200 வது டெஸ்ட்;  மும்பையில் இன்று தொடக்கம்

இந்தியா- மே.தீவு மோதும் 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கொல்கத்தா மைதானத்தில் தனது 199 வது டெஸ்ட்டை
விளையாடிய டெண்டுல்கருக்கு சொந்த மைதானத்தில் இன்று தொடங்கும் போட்டி 200வது டெஸ்டாகும். மே.தீவு கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்டங்களில் அபார வெற்றி பெற்றது. இதில் சமநிலை செய்தாலோ இந்தியா தொடரை கைப்பற்றிவிடும். மே.தீவு அணியை பொறுத்தவரை தொடரை சமன் செய்ய வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளது. ஏனென்றால் நவீன கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் டெண்டுல்கருக்கு இது கடைசி டெஸ்ட் போட்டியாகும். அவரது பிரிவுபசார டெஸ்ட் ஆகும்.
200 வது டெஸ்ட்டில் விளையாடும் உலகின் முதல் வீரர் என்ற பெருமையை டெண்டுல்கர் பெறுகிறார். பொண்டிங் 168 டெஸ்டில் ஆடி 2- வது இடத்தில் உள்ளார். கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கரின் கடைசி டெஸ்டில் வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் டோனி தலைமையிலான இந்திய அணி உள்ளது.
வெற்றியுடன் தனது சகாப்தத்தை முடித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கடைசி டெஸ்ட்டில் டெண்டுல்கர் சதம் அடித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரின் சதத்தை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

ad

ad