புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2013

தெற்காசிய இளைஞர் மெய்வல்லுநர் போட்டி:

பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம் இலங்கைக்கு இரண்டாம் இடம்

2015 இளைஞர் விளையாட்டு விழா இலங்கையில்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான இளைஞர் மெய்வல்லுநர் போட்டியில் 52 பதக்கங்களைக் குவித்து இந்தியா முதலிடம் பிடித்தது
. ராஞ்சியில் நடந்து முடிந்த 2 வது தெற்காசிய இளைஞர் தடகளப் போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கன், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டி திங்கட்கிழமை தொடங்கியது. போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர்கள் 12 பதக்கங்கள் உட்பட 14 பதக்கங்களை வென்றனர். 2 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் மேலும் பதக்கங்களைக் குவித்தனர்.
இதனால் பதக்கப் பட்டியலில் 52 பதக்கங்களுடன் (20 தங்கம், 16 வெள்ளி, 16 வெண்கலம்) இந்தியா முதலிடத்தைப் பிடித்தது. இலங்கை வீரர்கள் 10 தங்கம் உட்பட 34 பதக்கங்களுடன் 2 ம் இடத்தையும், 3 வெண்கலப் பதக்கங்களுடன் பங்களாதேஷ் 3 ம் இடத்தையும் பிடித்தன.
பாகிஸ்தான் அணி ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை மட்டும் கைப்பற்றியது. போட்டியில் பங்கேற்ற ஆப்கன் மற்றும் நேபாள நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு எந்தப் பதக்கமும் கிட்டவில்லை. 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய இளைஞர் தடகளப் போட்டியை நடத்த இலங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ad

ad