புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2013

விசேட விமானத்தில் யாழ். சென்ற பிரி. பிரதமர் கமரூன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தார்
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகைதந்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் யாழ்ப்பாணத்திற்கு சற்று முன்னர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட விமானத்தின் மூலமாகவே அவர் வடக்கிற்கு புறப்பட்டுள்ளார் என்றும் அவருடன் ஒரு குழுவினரும் வடக்கிற்கு சென்றுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் கமரூன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தார்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் , வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பு யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
அதே வேளை பிரதமர் கமரூன் யாழ், உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கும் விஜயம் செய்து அங்குள்ளவர்களிடம் கலந்துரையாடினார்.
பொதுநலவாய நாடுகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் கமரூன் பின்னர் விசேட விமானத்தில் யாழ் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

ad

ad