புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2013

பிரித்தானிய பிரதமருக்கு நிகராக சனல் 4 வை நம்பும் யாழ்ப்பாண மக்கள்
யாழ்ப்பாணத்துக்கு நேற்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் சென்றிருந்த போது அவரை காண காட்டிய அதே அக்கறையை பொதுமக்கள் சனல் 4 ஊடகத்தினர் மீதும் காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில சந்தர்ப்பங்களில் சனல் 4 விடம் தமது பிரச்சினையை கூறினால் அது பிரித்தானிய பிரதமருக்கு உரியவகையில் தெரியப்படுத்தப்படும் என்று நம்பிக்கையை அவர்கள் வெளிக்காட்டினர்.
காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பில் எவ்வித மகஜர்களையும் பிரித்தானிய பிரதமரிடம் நேரடியாக கொடுக்கமுடியவில்லை.
இதற்கான காரணம் அவரின் பாதுகாப்பு கருதியதாக அமைந்திருந்தது.
பாரிய அலையிலான மக்களை கெமரோன் சந்திப்பது கெமரோனின் பாதுகாப்பு அதிகாரிகளை பொறுத்தவரை சாத்தியமானதாக இருக்கவில்லை.
இதன்போது கெமரோனின் சார்பில் சனல் 4 ஊடகவியலாளர்களிடம் தமது மனுக்களையும் காணாமல் போனோரின் தகவல்களையும் அவர்களின் உறவுகள் கையளித்தனர்.

ad

ad