இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் போன்ற 2 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.