புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

லயோனல் மெஸ்சி புதிய சாதனை
பல சாதனைகளை புரிந்துள்ள லயோனல் மெஸ்சி, அதிக கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

பார்சிலோனாவில் லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடந்த போட்டியில் பார்சிலோனா- ஒசாசுனா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பார்சிலோனா அணி 7–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது, பார்சிலோனா சார்பில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி ஹாட்ரிக் கோல்(18, 63, 88வது நிமிடம்) அடித்தார்.

இப்போட்டியில் மெஸ்சி, தனது இரண்டாவது கோல் அடித்த போது, லா லிகா, கோபா டெல் ரே, சர்வதேச மற்றும் நட்பு ரீதியிலான கிளப் அணிகள் மோதும் போட்டிகளில், பார்சிலோனா அணிக்காக ஒட்டுமொத்தமாக அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

இதுவரை இவர், 371 கோல் அடித்துள்ளார். இதன்மூலம் மற்றொரு பார்சிலோனா வீரர் பிலிப்பைன்சின் பவுலினோ அல்கான்டராவின்(369 கோல்) சாதனையை முறியடித்தார்.

இப்பட்டியலின் 3, 4வது இடத்தில் முறையே ஸ்பெயினின் ஜோசப் சமிடியர்(333), சீசர் ரோட்ரிகுயஸ்(301) உள்ளனர்

ad

ad