புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

என் ஆதரவாளர்கள் பனங்காட்டு நரிகள்: மு.க.அழகிரி பதிலடி
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரியுடன் தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது. அதனை மீறி தொடர்பு வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
என கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்து அறிக்கை விடுத்திருந்தார்.

இதுகுறித்து மு.க.அழகிரி, ‘‘எனது ஆதரவாளர்கள் பனங்காட்டு நரிகள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். பூச்சாண்டி வேலைக்கெல்லாம் பயப்படமாட்டார்கள்’’ என்று காட்டமாக கூறினார். அன்பழகன் எச்சரிக்கை குறித்து அழகிரி ஆதரவாளர்களிடம் கேட்டபோது அவர்கள், ‘‘தி.மு.க. சோதனையை சந்தித்தபோதெல்லாம் பக்கபலமாக இருந்தவர் அழகிரி. ஆனால் அவர் மீது தேவையற்ற நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்து வருகிறது. ராஜபாளையத்தில் 23–ந்தேதி நடக்கும் கூட்டத்தில் எங்களது வலிமையை தெரிவிப்போம்’’என்று தெரிவித்துள்ளார்.

ad

ad