புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

வடக்கு மாணவர்களின் பல்கலைகழக புகுதிறமை தென்-மாணவர்களிடம் இல்லையே ஜனாதிபதி 
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் போரில் சிக்கியிருந்தாலும் கல்வியை சிறந்த முறையில் பயின்றதால் அதிகளவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையிலான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் நடைபெறாத நாட்டின் தென் பகுதி வடக்கு, கிழக்கு மாணவர்களை போல் திறமைகளை வெளிக்காட்டவில்லை என்பதால் அதிகளவில் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாது போனது.
தென் பகுதி மாணவர்களுக்கு அரசாங்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால் அதிகளவில் புள்ளிகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
யுத்தம் இல்லை. வசதிகளில் குறைவில்லை என்றாலும் வடக்கு பிரதேச மாணவர்களைப்போல் தென் பகுதி மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த முடியவில்லை.
உயர்தரப் பரீட்சை முடிவுகளை பார்க்கும் போது வடக்கை சேர்ந்த மாணவர்களே அதிகளவில் பல்கலைக்கழக செல்வதற்கான அனுமதிகளை பெற்றனர். அந்த இடத்தை தென் பகுதி மாணவர்களாலும் கொழும்பு மாணவர்களாலும் பிடிக்க முடியவில்லை.
இரண்டாம் இடத்தை சப்ரகமுவ மாகாண மாணவர்களும் மூன்றாம் இடத்தை கிழக்கு மாகாண மாணவர்களும் பிடித்துள்ளனர்.
தென் மாகாணம் நான்காம் இடத்தையும் மேல் மாகாணம் 5 ஆம் இடத்தையும் பிடித்தன என்றார்.

ad

ad