ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக் குழு: நியூஸிலாந்தின் நீதிபதி தலைமை தாங்கவுள்ளார்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதியெருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பெண் நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட் என்பவரே விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.