பல்கலைக்கழக மாணவர் மீது ஜயசூரிய தாக்குதல்!- சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
பிரதி அமைச்சரும் இலங்கை கிரிக்கட் அணித் தேர்வுக்குழுத் தலைவருமான சனத் ஜயசூரிய பல்கலைக்கழக மாணவர் மீது நடத்திய தாக்குதலுக்கு சட்டத்தரணிகள் சங்கம்
கண்டனம் வெளியிட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இது தொடர்பில் இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் சனத் ஜயசூரிய தலைமையிலான குழு ஒன்று பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் காவற்துறையினர் செயற்படாது இருந்தமை தொடர்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவற்துறையினர் இவ்வாறு குற்றச் செயல்களை கண்டு கொள்ளாது இருப்பதால்இ அதன் நன்மையை அரசியல்வாதிகள் அனுபவித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.