புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2014

நீதிபதியின் வரவின்மையால் விபூசிகா மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 
 கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகாவும் அவருடைய தாயாரும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சிறுமி விபூசிகா மற்றும் அவரது தாயாரும் இம்மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவருக்கு அடைக்கலம் வழங்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் சமர்ப்பிக்கப்படாதுள்ள தடுத்துவைக்கும் உத்தரவினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
 
எனினும் இன்றைய தினம் வழக்கிற்கு நீதிபதி சமூகமளிக்காமையால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
 
மேலும் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad