ஈராக்கின் மொசூல் நகரத்தில் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் நூறிற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயுததாரிகளால் சமரா நகரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் அகோர தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
.மேலும் ஈராக்கில் இடம்பெறும் தாக்குதல்கள் காரணமாக இந்த வருடத்தில் மாத்திரம் ஐந்து லட்சம் பேர்வரை இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.