-
25 ஜூன், 2014
24 ஜூன், 2014
மாநிலங்களவை இடைத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் திங்கள்கிழமையுட
அதிமுக வேட்பாளர் நவநீதிகிருஷ்ணனைத் தவிர, பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் மனுதாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
மாநிலங்களவை திமுக வேட்பாளராக இருந்த டி.எம்.செல்வகணபதி, தகுதி இழப்புக்கு உள்ளானதால் அவர் தனது எம்.பி.
முல்லையில் மீனவர்களின் வாழ்வாதாரம் முடக்கம்; அரசியல் ஆதிக்கங்களுடன் அரங்கேற்றம்
வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துகிறோம் என்ற அரசின் போலிகளின் பின்னணியில் நாலாப்புறமும் மக்களின் இயல்பு வாழ்வு சிதைக்கப்படும் திட்டங்களே அரங்கேறி வருகிறன என
பொருளாதார தடை விதிக்கவே ஐ.நா. திட்டம் அதற்கு துணைபோகிறது தமிழ் கூட்டமைப்பு - அமைச்சர் திஸ்ஸவிதாரண
"இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துலக சமூகத்திடம் முன்வைப்பதற்குரிய பொறிமுறைத் திட்டங்களை ஐ.நா. மனித உரிமைகள் சபை தற்போது வகுத்துவருகின்றது.
23 ஜூன், 2014
கலைஞர் கோபம்.சீனியர் மா.செ க்கள் நம்பும் ஸ்டாலின்
""ஹலோ தலைவரே...… சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றி இந்து முன்னணித் தலைவர் ராஜகோபாலன் பேசுனப்ப, தமிழ்நாட்டில் சட்டம் இருக்குது, ஆனா அது ஒழுங்கா இல்லைன்னு சொல்லியிருக்காரு.''
""ஊடகங்களில் வரும் செய்திகளும் அதைத் தானே காட்டுது. மீடியாக்களில் வராத செய்தி களைப் பற்றிப் பேசுவோம்ப்பா.. அதைத்தானே நம்ம நக்கீரன் வாசகர்களும் பொதுமக்களும் நம்மகிட்டே எதிர்பார்க்குறாங்க.''
96-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், 91-96 வரையான ஜெ. ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக 40 வழக்குகள் போட்டது. ""எல்லா வழக்கிலும் நான் குற்றமற்றவள் என என்னால் நிரூபித்துவிட முடியும். ஆனால் இந்த சொத்துக்குவிப்பு வழக்குதான்...'' என தனது வழக்கறிஞர்களிடம் சந்தேகமாக அன்றே சொன்ன ஜெ., கடந்த 18 வருடங்களாக சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டார்.
ஆனால் கடந்த 17-ந் தேதி (செவ்வாய்) சுப்ரீம்கோர்ட்டில் நீதியரசர் விக்ரம்ஜித் சென், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்த வாதங்கள்தான் "ஜெயலலிதாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது என்கிறார்கள் சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர்கள்.
ஜெ. முதலமைச்சராக இருந்த 91-96ம் ஆண்டுவரை ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்குபேரை இயக்குநர்களாக கொண்டு சுமார் 32 கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஜெ. வீடான 36, போயஸ் கார்டன் என்ற முகவரியில் இயங்கிய இந்த கம்பெனிகளில் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கியது. ஒரு கம்பெனியின் பெயரில் போடப்படும் லட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றொரு கம்பெனியின் பெயருக்கு மாற்றப்படும் என நடந்த இந்தப் பணப்புழக்கத்திற்குக் காரணம் இரண்டே நபர்கள். ஒருவர் பெயர் ஜெயராமன். இன்னொரு வர் ராஜன். இருவருமே போயஸ் கார்டன் வேலையாட்கள். இந்த இருவரும்தான் இந்த 32 கம்பெனிகளையும் பதிவு செய்தவர்கள். இவர்கள் கையெழுத் தில்தான் 32 கம்பெனிகளிலும் திடீர் திடீரென்று லட்சக்கணக் கில் பணப் பரி மாற்றம் நடக்கும்.
தமிழ், முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கே தடையாம் ; அரசாங்கம்
இலங்கையில் இனவாத அமைப்புகள் என்ற பெயரில் செயற்பட்டுவரும் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
ஐ.நா விசாரணைக்குழு நிபுணராக முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள்; மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இலங்கை தொடர்பிலான விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
22 ஜூன், 2014
தமிழ் யுவதியை இராணுவ வீரர் திருமணம் செய்வதா? திரைப்பட வெளியீடு இரத்து
தமிழ் யுவதியை இராணுவ வீரர் திருமணம் செய்வதான கதையை உள்ளடக்கி இலங்கையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதலால் முடங்கியது மகிந்தவின் இணையம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இணையத்தளம் உள்ளிட்ட அரச தரப்பினரின் பல அதிகாரபூர்வ இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி செயலிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விவகாரம்
இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் பல தரப்பட்டவர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தி வரும், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரங்கோ, தனது இலங்கைப் பயணத்தின் முடிவில்
ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையில் சாட்சியங்களை வழங்க தயாராக உள்ளவர்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமா இல்லையா என அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திருந்தது.
இந்த நிலையில், இலங்கைக்கான அமெரிக்கத் துதுவர மற்றும் அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஒருவரை சந்தித்துள்ள கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்க தூதரகத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றதுள்ளதுடன், அதில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் சர்வதேச விசாரணையில், இலங்கையை சேர்ந்த எவராவது சாட்சியமளித்தால், அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முடியும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியிருந்ததை அடிப்படையாக கொண்டே, கூட்டமைப்பு, அமெரிக்காவிடம் இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள கருத்து வெளியிடும் உரிமை இருக்க வேண்டும் என தாம் அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக் கொண்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்
பாணந்துறை தீ விபத்து மின்சார கசிவால் ஏற்படவில்லை :நோலிமிட் முகாமையாளர்
பாணந்துறையில் இன்று தீ வைக்கப்பட்ட நோலிமிட் கட்டடத்தில் மின்சார கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மாணவி பிளஸ் 2வில் உயர் புள்ளி - மருத்துவம் படிக்க மறுக்கிறது தமிழகம்
இலங்கையில் உயர்தர பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200க்கு 1170 மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க விரும்பி கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி அழைப்புக்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை அச்சுறுத்தி
பேராதனை பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை அச்சுறுத்தி
21 ஜூன், 2014
இலங்கைக்கு முஸ்லிம் நாடுகள் எச்சரிக்கை
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், இலங்கை தொடர்பான நுழைவுச்சகட்டுப்பாடுகளில் திருத்தங்களை
யாழில் பட்டம் ஏற்றும் விழா ;முதலிடம் டிராகன்
யாழில் மக்களின் 'பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா இன்று யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
இந்த பட்டங்களில் வெகும் விமர்சையாக கட்டப்பட்டதும் பறக்கவிடப்பட்டதுமான பட்டங்களுக்கான விருதுகளில் முதல் இடத்தை டிராகன் பட்டமும்,இரண்டாம் இடத்தை கடல் கன்னி உருவ பட்டமும்,தக்கவைத்து கொண்டது.
இந்த பட்டங்களில் வெகும் விமர்சையாக கட்டப்பட்டதும் பறக்கவிடப்பட்டதுமான பட்டங்களுக்கான விருதுகளில் முதல் இடத்தை டிராகன் பட்டமும்,இரண்டாம் இடத்தை கடல் கன்னி உருவ பட்டமும்,தக்கவைத்து கொண்டது.
யாழ். பள்ளிவாசல்களை முற்றுகையிட்ட அதிரடிப் படையினர்
யாழ்.குடாநாட்டில் பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம் தொழுகை இடங்கள் மீதும் கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்படும் நிலையில் குடாநாட்டிலுள்ள பள்ளிவாசல்கள்
மைக்கேல் சூமேக்கரின் பரிதாப நிலை
ஜேர்மனி நாட்டை சேர்ந்த பிரபல கார்ப்பந்தய வீரரான மைக்கேல் சூமேக்கரின் வாழ்க்கை நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை எப்போது கிடைக்கும் ?
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டும் - ராதிகா எம்.பி
இலங்கையின் அரசியல் அமைப்பின் கீழ், அந்த நாட்டின் மக்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் கோரியுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே இனவாத பேயிலிருந்து சிறுபான்மையினர் தப்பிக்கலாம்; சிவாஜிலிங்கம்
சர்வதேச நீதி விசாரணை மூலம் அரசின் தோலை உரிக்கின்ற இந்த நேரத்தில் முஸ்லிம் சகோதரர்களும் தமக்கு நடைபெற்ற அநியாயங்களை சர்வதேசத்திடம் கூற முன்வர வேண்டும் .
நாங்கள் பொறுமையிழந்தால் பௌத்தர்கள் தாங்க மாட்டார்கள்; எம்.எம்.நிவாகிர்
நிலம் வேண்டும் என்றால் அந்த நிலங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் எங்கள் மீது தேவையில்லாது கை வைத்து மோதலை தூண்டி விடாதீர்கள்.
அமெரிக்க பிரதிநிதிகளிடம் அளுத்கம சம்பவம் பற்றி எடுத்துரைத்தார் ஹக்கீம்
நாட்டுக்குள் காணப்படும் மோதலான நிலைமையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இன்று நடத்தப்பட்ட ஹர்த்தாலை அமைதியான முறையில் நடத்தியமையை பாராட்டுவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அளுத்கம வன்செயல் எண்மர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு - மொஹமட் அஸ்லம் எம்.பி தகவல்
அளுத்கமையில் இடம் பெற்ற சம்பவங்களினால் இதுவரை எண்மர் உயிரிழந்துள்ளதுடன் 170 பேர் காயமடைந்துள்ளனர். 370 குடும்பங்களை சேர்ந்த 2450 பேர் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. மொஹமட் அஸ்லம்
இன்று பிரான்ஸ் ஐ எதிர்த்து சுவிட்சர்லாந்து விளையாடுகிறது
சுவிஸ் அணியில் ச்டோக்கேருக்கு பதிலாக மேமேடியும் ட்ரிமிசுக்கு பதிலாகா செவேரோவிசும் பிரான்ஸ் அணியில் போக்பாவுக்கு சிசொக்கொவும் க்ரீன்ச்மானுக்கு ஜிரோடும் மற்றப் பட்டுளார்கள் .இறுதியாக நடந்த 3 போட்டிகளில் இரண்டு அணிகளும் சமநிலையை அடைந்தன என்பது குறிப்பி டத் தக்கது .பிரான்ஸ் அணியில் பிரபல நட்சத்திர வீர பிரான்க் ரிபேறி உடல்நலமின்றி இருப்பதால் ஆடவில்லை
சுவிஸ் அணியில் ச்டோக்கேருக்கு பதிலாக மேமேடியும் ட்ரிமிசுக்கு பதிலாகா செவேரோவிசும் பிரான்ஸ் அணியில் போக்பாவுக்கு சிசொக்கொவும் க்ரீன்ச்மானுக்கு ஜிரோடும் மற்றப் பட்டுளார்கள் .இறுதியாக நடந்த 3 போட்டிகளில் இரண்டு அணிகளும் சமநிலையை அடைந்தன என்பது குறிப்பி டத் தக்கது .பிரான்ஸ் அணியில் பிரபல நட்சத்திர வீர பிரான்க் ரிபேறி உடல்நலமின்றி இருப்பதால் ஆடவில்லை
20 ஜூன், 2014
சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க மீண்டும் வலியுறுத்துகிறது பிரித்தானியா
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அமைவான சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானியா
போர்த்துகல் தூண் சாய்ந்து விட்டதா? ரொனால்டோ விலகல்
போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)