புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2014



டிகை பிரீத்தி ஜிந்தா என்றதுமே... அவரின் குழந்தைச் சிரிப்பும், குதூகல கன்னக் குழியும் சட்டென ஞாபகத்திற்கு வரும். அவரின் அப்பாவித் தோற்றத்திற்கு சம்பந்தமே இல்லாமல் அவரைச்சுற்றி அதிரடி சர்ச்சைகளும் நிறையவே உண்டு

ராணுவ அதிகாரியின் மகளான பிரீத்தி, சிம்லாவில் பிறந்தவர். கிரிமினல் சைக் காலஜி மேற்படிப்பு படித் தவர். பணத்தேவை ஏற்பட்டதால் மாடலிங் உலகிற்கு வந்த பிரீத்தி இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர் களுள் ஒருவரான சேகர்கபூரைச் சந் தித்தார். பிரீத்தியை ஹீரோயினாக வைத்து சேகர்கபூர் தொடங்கிய படம் பாதியிலேயே கை விடப்பட்ட நிலை யில் தனது நண்பரும், இயக்குநருமான மணிரத்னத்திடம் பிரீத்தியை ரெகமெண்ட் செய்தார் சேகர்கபூர். அதன்பிறகே "தில்ஸே'’படத்தின் மூலம் பிரீத்தியை நாடறிந்த நடிகையாக்கினார் மணிரத்னம்.

இந்தப் படம் ‘"உயிரே'’என்ற பெயரில் தமிழிலும் வெளியிடப்பட்டு கோலிவுட்டிலும் பிரபலமானார் பிரீத்தி. நடிகை, தயாரிப்பாளர், மாடலிங், கதாசிரியர், சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்ட பிரீத்தி ‘பி.பி.சி.’ ஆன் லைனி லும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும்கூட அதில் கட்டுரை எழுதியுள்ளார். இதுதவிர... ஐ.பி.எல். கிரிக்கெட்டின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். அரசியல் விருப்பத்துடன் இருக்கும் பிரீத்தி, ரெண்டு வருடங் களுக்கு முன்பே "நான் மோடியின் ரசிகை'’ என அறிவித்து காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட தன் குடும் பத்தினரின் எதிர்ப்புக்கும் ஆளானார். 

இந்நிலையில் தனது முன்னாள் காதலர் மீது பிரீத்தி அளித்திருக்கும் பாலியல் தொல்லை புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரீத்தியால் குற்றம் சாட்டப்பட்டவர் லேசுப்பட்ட ஆளில்லை. உலகறிந்த டெக்ஸ்டைல் நிறுவனமான "பாம்பே டையிங்' வீட்டு வாரிசான நெஸ்வாடியா மீதுதான். ஒரு வகையில் "பாகிஸ்தானின் தந்தை' முகமது அலி ஜின்னாவின் கொள்ளுப்பேரன்தான் நெஸ்வாடியா.

இதனால் சினிமாத்துறை மட்டுமின்றி இண்டஸ்ட்ரியல் ஏரியாவும் பரபரத்துக் கிடக்கிறது இந்தப் புகாரால்!

மும்பைத் தமிழ்ப் பெண்ணான பாடகி, நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சேகர்கபூர். இவர்களின் இல்லறத்திற்குள் பிரீத்தியால் புயல் வீசுவதாக மும்பை மீடியாக்கள் பரபரத்த நிலையில்தான்... நெஸ்வாடியா வுடன் பிரீத்திக்கு நட்பு ஏற்பட்டு, நட்பு காதலானது. 2005 முதல் 2009 வரை பிரீத்தியும் நெஸ்வாடியாவும் தாலிகட்டாமலேயே சேர்ந்து வசித்து வந்தவர்கள்தான். ஆனால் நெஸ்வாடியாவின் அம்மாவுக்கு பிரீத்தியை பிடிக்காத நிலையில், நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நெஸ்வாடியாவைப் பிரிந்து சென்றார் பிரீத்தி.

இருப்பினும் பிரிவதற்கு முன் இருவரும் சேர்ந்து பஞ்சாப் கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கி னார்கள். பெர்ஸனல் ரீதியாக இருவரும் பிரிந்தாலும், பஞ்சாப் அணியின் உரிமையாளராக பிரீத்தியும், இணை உரிமையாளராக நெஸ்வாடியாவும் இன்றளவும் இருப்பது குறிப்பிடத்தக்கது!

நெஸ்வாடியா மீது பிரீத்தி அளித்திருக்கும் புகார் என்ன?

""எனக்கும், நெஸ்வாடியாவுக்கும் இடையே இருந்த உறவு சில ஆண்டுகளுக்கு முன் முடிவுக்கு வந்தது. இருப்பினும் பஞ்சாப் லெவன்       அணியின் சக பார்ட்னர் என்கிற முறையில் அவரிடம் அது சம்பந்தமாக மட்டுமே பேசிக்கொள்வேன். அப்படி தொழில்முறையில் பேசிக் கொள்ளும்போது ஆபாச வார்த்தைகளால் திட்டுவார். இதனால் பலமுறை எனது சகாக்கள் முன்னிலையில் அவமானமும், வெட்கமும் அடைந்திருக்கிறேன். பெங்களூருவில் ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் ஏலம் நடந்தபோது ‘"என்கூட சேர்ந்து உட்காரு'’ என மிரட்டி தகராறு செய்தார். நான் மறுத்தபோது ஆபாசமாக திட்டி, "நான் வாடியா குரூப் அதிபர். எனக்கு முன்னால் நீ வெறும் தூசு. உன்னால என்னை ஒண்ணும் பண்ணமுடியாது'’ என சத்தம் போட்டார். ஐ.பி.எல். அதிகாரிகள் தலையிட்டும் அவர் அடங்கவில்லை. "போலீஸில் புகார் செய்வேன்'’என நான் எச்சரித்த பிறகே அமைதியானார்.

கடந்த மே 30-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், எங்கள் அணியும் அரையிறுதிப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, “"நீ வெறும் நடிகைதான். ஆனால் நான் சக்தி வாய்ந்தவன். உன்னை காணாமல் செய்துவிடுவேன்'’என மிரட்டி மானபங்கம் செய்தார். இதுவரை நான் பொறுமையாக இருந்தேன். ஆனால் இப்போது என்னோட உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டதால் புகார் தருகிறேன்''’என 13-06-2014 அன்று கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார் பிரீத்தி.

இந்த விவகாரம் குறித்து நமது மும்பை சோர்ஸ்களிடம் விசாரித்தபோது... சில விஷயங்கள் கிடைத்தன. சமீபகாலமாகவே பிரீத்தி சங்கட  மான மனநிலையில் இருந்தார். இணையத்தில் ஆபாசப்படங்களுடன் பிரீத்தி புகைப்படத்தின் தலையை இணைத்து வெளியிட்டு வந்தார்களாம் சிலர். 

"என்னை ஆபாசமாகச் சித்தரிப்பது எனக்கு மனவேதனையை அளிக்கிறது. நடிகைதானே நீ... இதைப் பெரிசுபடுத்தாதே... என சால்ஜாப்பு சொல்கிறார்கள். நடிகை என்பவள் மனுஷி இல்லையா? நான் நடிகை என்பதையும் மீறி கிரிக்கெட் உள் ளிட்ட விஷயங் களில் ஜெயித்திருப் பது மற்றவர்களுக் குப் பிடிக்கவில்லை.  என்னுடன் டேட் டிங் செய்ய ஆசைப் படுபவர்கள் "தன் னைவிட அவள் புகழ் பெற்றவளாக இருக்கி றாளே...' என பொறா மைப்படுகிறார்கள். நான் நடிகை என் பதற்காக நிஜவாழ்வி லும் நான் வெறும் கவர்ச்சிப் பொம்மையாக இருக்க வேண்டும் என சிலர் எதிர்பார்க் கிறார்கள். நான் நானாக இருக்கக் கூடாதா? சராசரியைப் போல் எனக்கும் சிரிப்பு வரும். அழுகை வரும். என்னை அழவிடுங்கள் ப்ளீஸ்...' என சமீபத்தில் டுவிட்டரில் பிரீத்தி ஜிந்தா வேதனைப்பட்டிருந்ததை குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

வேறு ஒரு பெண்ணுடன் நெஸ்வாடியா பழகியது பிடிக்காமல்தான் அவரை விட்டு பிரீத்தி விலகினதாகவும் சொல்லப்படுகிறது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புகூட பிரபல நடிகையுடன் கிசுகிசுக்கப்படார் நெஸ். பாகிஸ்தான் அப்பாவிற்கும், ஜெர்மன் அம்மாவிற்கும் மகளாக அமெரிக்காவில் பிறந்த நர்கீஸ்ஃபக்ரி இப்போது பாலிவுட்டின் கவர்ச்சிப் புயலாக வளையவருகிறார். ஒரு பார்ட்டியில் நர்கீஸும், நெஸ்ஸும் அணைத்து முத்தமிட்டுக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

நெஸ்ஸால் பிரீத்தியை மறக்க முடியவில்லை. தன் கட்டுப்பாட்டிலேயே பிரீத்தி இருக்க வேண்டும் என நினைக் கிறார். அதனால்தான் இருவருக்கும் காதல் பிரிவு உண்டான நிலை யிலும் கிரிக்கெட் டீம் பார்ட்னராக தொடர்கிறார் நெஸ். சமீப காலமாக பிரீத்தி வேறு ஒரு காதல் வலையில் வீழ்ந்திருப்பதாகவும், அதை நெஸ்ஸால் ஜீரணிக்க முடியாத தால்தான் பிரச்சினைகள் எழுந் திருக்கிறது... எனவும் மும்பை வட்டாரங்களில் உறுதி செய்கிறார்கள்.

நீங்கள் மீண்டும் காதல்வயப்பட்டிருக்கிறீர்களாமே? என சமீபத்தில் மீடியாவினர் கேள்வி கேட்டு துரத்த... டென்ஷ னாகிவிட்டார் பிரீத்தி.

""என்னோட தனிப்பட்ட உறவுகளைப்பத்தி நான் மீடியா கிட்ட பேச விரும்பவில்லை. இப்படிப்பட்ட கேள்விகளை நீங்க கேட்கும்போது எனக்கு ரொம்ப ரொம்ப கோவம் வருது. என்ன செய்றது? கோபத்தை அடக்கிக்கிட்டு சிரிக்க ட்ரை பண்றேன்''’என்றார் பிரீத்தி.

""வான்கடே ஸ்டேடியத்தின் கர்வாரே பெவிலியனில் அமர்ந்து மேட்ச் பார்க்க 14 இருக்கைகள் முன்பதிவு செய்திருந்தேன். ஆனால் பிரீத்தியும் அவரின் நண்பர்களும் அந்த இருக்கைகளை ஆக்கிரமித்துக்கொண்டு எனது வயதான தாயாரை உட்காரவிடாமல் அலைக்கழித்தனர். இதை நான் கண்டித்தேன். இந்தக் கோபத்தில் என்மீது அபாண்டமாக புகார் செய்துள்ளார். என்னை தாதாக்களை வைத்து மிரட்டுகிறார்'' என்கிறார் நெஸ்வாடியா.

பிரீத்தி ஜிந்தா, நெஸ்வாடியா விவகாரம் சாதாரண சர்ச்சைகளில் ஒன்றாக இருக்க முடியாது. புகழ் பலம், அதிகார பலம் கொண்ட இருவருக்கு இடையேயான பிரச்சினை என்பதால் எல்லா மட்டமும் அதை கவனித்துக்கொண்டிருக்கிறது.

எது உண்மையோ? எது பொய்யோ?

ஆனால் நியாயம் ஜெயிக்க வேண்டும். அதுதானே நியாயம்!                          

-இரா.த.சக்திவேல்

ad

ad