புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2014

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை எப்போது கிடைக்கும் ? 
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
 
இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
 
விடுதலைப் புலிகளை வென்றுஇ 2009, மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துவிட்டபோதும் ராமேசுவரத்துக்கு அகதிகளின் வருகை நின்றபாடில்லை.
 
தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. இந்த முகாமில் 67 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மேலும், 33,000-க்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.
 
மண்டபம் முகாமில் தற்போது 641 குடும்பங்களில் ஆண்கள் 792 பேர், பெண்கள் 837 பேர், ஆண் குழந்தைகள் 287 பேர், பெண் குழந்தைகள் 268 பேர் என மொத்தம் 2,184 பேர் வசித்து வருகின்றனர்.
 
இதேவேளை, மண்டபம் அகதிகள் முகாமை அண்மையில் ஆய்வு செய்த ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா கூறியது:
 
இலங்கைத் தமிழருக்கு அரசின் மாத உதவித் தொகை சரியாக கிடைத்துவிடுகிறது. ஆனால், கழிவறைகள், குளியல் அறைகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் மண்டபம் முகாமில் நிறைவேற்றப்படவில்லை. இதனால், திறந்தவெளியைத்தான் முகாம்வாசிகள் பயன்படுத்தவேண்டிய நிலையில் உள்ளனர்.
 
பல ஆண்டுகளாக முகாமில் தங்கியிருந்து ஊருக்குச் செல்ல வேண்டும் என்றாலோ அல்லது வேறு முகாம்களுக்கு இடம் மாற வேண்டும் என்றாலோ இங்குள்ள மண்டபம் முகாம் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தாலே போதும் என்ற நிலை ஏற்கெனவே இருந்தது. ஆனால், தற்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. இதற்காக முயலும் முகாம்வாசிகள் அலைக்கழிக்கப்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
 
அகதிகள் சமையல் செய்வதற்காக கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச காஸ் சிலிண்டர்கள் தற்போதைய ஆட்சியில் வழங்கப்படுவதில்லை. முகாம்வாசிகளுக்கு மீண்டும் இலவச காஸ் சிலிண்டர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை அகதிகளின் நிலை குறித்து பதிவு செய்வேன் என்றார்.
 
மேலம், வாழும் கலை' அமைப்பின் நிறுவனரும், ஆன்மிகவாதியுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது:
 
3 மாதங்களுக்கு முன் மண்டபம் அகதிகள் முகாமில் வாழும் இலங்கைத் தமிழர்களைச் சந்தித்து, அவர்களின் தற்போதைய மனநிலையைப் பற்றி அறிந்தேன்.
 
அவர்கள் வாழ்நாள் முழுவதும் அகதிகளாகவே வாழ முடியாது. எனவே, அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றார்.

ad

ad