புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2014


முஸ்லிம்களுக்கு ஆயுதங்களை தாருங்கள். நாங்களே எங்களை பாதுகாத்துக் கொள்வோம்.
 என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்ரதணி ஹுனைஸ் பாரூக் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது தெரிவித்தார்.

நேற்று 2014.06.17ம் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அழுத்கம சம்பவம் தொடர்பிலான விடயம் முன்வைக்கப்பட்ட போது இடையில் குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்’தர்ஹா டவுன், அழுத்கம, பேருவளை, பிரதேசத்தில் இடம் பெற்ற மண் கொள்ளைச் சம்பவங்கள், வீடுகளை எரித்தமை, கடைகளை எரித்தமை, மனிதப் படுகொலை, போன்றன ஆயுதம் தாங்கிய அரச படைகள் பார்த்துக் கொண்டிருக்கும் போது இடம்பெற்றிருக்கின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
1980-1990ம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் கிராமங்களைப் பாதுகாக்க இன வெறியாட்டத்தை கட்டுப்படுத்த சட்டபூர்வ ஆயுதம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் போது முஸ்லிம்கள் தங்களது கிராமங்களைப் பாதுகாத்தனர். இன்று இதைவிட மோசமான நிலை தென்னிலங்கையில் உருவாகியுள்ளது.
அரச படைகளால் அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்க முடியாவிட்டால் எமக்கு முஸ்லிம்களுக்கு சட்டபூர்வ ஆயுதங்களைத் தாருங்கள் நாங்கள் எமது கிராமங்களையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் இன வெறியாட்டக் காரர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்கின்றோம் என்று கோரிக்கை விடுத்தார்.

ad

ad