காங்கிரஸ் மற்றும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான கூட்டணி அமைய ஆரம்பம் முதல் பாடுபட்டவர் காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன். தற்போது இந்தக் கூட்டணி கைகூடி வந்து, தொகுதிப் பங்கீடும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது பிரச்சாரப் பணிகளை தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், மன உளைச்சல் காரணமாக பாஜக கூட்டணிக்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை எனவும், கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையேறி பிரச்சாரத்தில் ஈடுபடாவிட்டால் அதிமுக.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையில் புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்தேன். அதன் விளைவாகவே தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய