நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு எதுவும் இல்லை
என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக
ஐ.நா மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு எதுவும் இல்லை என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களே நீதியை கேட்க வேண்டும். அதன் காரணமாகவே சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி வருகிறோம். எல்லா கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்பாத போதிலும், கோரிக்கைகளை முன்வைத்து முயற்சிப்பது முக்கியமானது. அமெரிக்க ஆதரவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என நம்புகிறோம். கடந்த இரண்டு தீர்மானங்களைப் போன்றே இந்த தீர்மானத்திலும் இந்தியாவின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
|