புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

அறிவாலயத்தை மீட்க பண்டிய நாட்டில் இருந்து படை எடுக்க உத்தரவிடுங்கள் என்று அழகிரி ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.
மதுரையில் தயா மகாலில் இன்று மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களின் கூட்டத்தில் பேசினார். பின்னர் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அப்போது அவர்கள்,
தலைமையிடம் அழகிரி ஆதரவு கேட்கத் தேவையில்லை என்று கூறினர்.
மேலும், அறிவாலயத்தை மீட்க வேண்டுமென்றால், பாண்டிய நாட்டில் இருந்து படையெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்ற வேண்டும். எனவே, பாண்டிய நாட்டில் இருந்து படையெடுக்க உத்தரவிடுங்கள் என்று மு.க.அழகிரியிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.
அப்போது, கட்சிக்கு உழைத்த தொண்டர்களை திமுக மாவட்ட செயலாளர்கள் மதிப்பது இல்லை. பணம் கொடுப்பவர்களுக்குத்தான் பதவி கொடுக்கப்படுகிறது. இந்த கும்பலிடம் இருந்து கட்சியை மீட்க வேண்டும் என்று அழகிரி ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.
இதன்மூலம், புதுக்கட்சி தொடங்கும் எண்ணத்தை விட, திமுகவைக் கைப்பற்றும் எண்ணமே அழகிரி ஆதரவாளர்களிடம் மேலோங்கி இருப்பது வெளித்தெரிந்தது.

ad

ad