புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014


திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் பாஜக கூட்டணி அமையும்.: வெங்கையா நாயுடு பேச்சு 
 
மோடியை பிரதமராக்குவோம் என்ற பிரச்சார நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, 

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில்பாஜக கூட்டணி அமையும். இந்தியாவில் ஊழலற்ற, சிறந்த ஆட்சியை மோடி அமைப்பார் என்று மக்கள் நம்புகின்றனர். மாநில கட்சிகள் இணைந்து மத்தியில் 3வது அணியை அமைப்பது சாத்தியமற்றது. 
தவறான வெளியுறவு கொள்கைகளால் அண்டை நாடுகளுடன் உறவு பாதிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு கொள்கையால் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு சரிந்துள்ளது. தவறான கொள்கையால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. நிலத்தில் காமன்வெல்த் முறைகேடு. நிலத்துக்கு அடியில் நிலக்கரிச் சுரங்கம், வானத்தில் ஹெலிகாப்டர், அதற்கு மேல் 2ஜி அலைவரிசை என ஊழல்களை செய்துள்ளது. கடந்த 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்ககையில் இதுபோன்ற சந்தர்ப்பவாத அரசியலை நான் பார்த்ததில்லை. 
தமிழக வரலாற்றில் முதல் முறையாக இன்று ஒரு புதிய அத்தியாயம் உருவாகியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் பாஜகவுடன் ஒன்றாக கைகோர்த்து, 3வது மாற்று அணியாக மக்கள் முன் நிற்கிறது. இது தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் சேர்ந்த கூட்டணி. தமிழகம் முழுவதும் இந்த அலை வீசுகிறது என்றார்.

ad

ad