புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014



மலேசிய விமானத்தை அந்த விமானத்தின் ஒட்டியே கடத்தி இருப்பதற்கான சாத்தியம் உண்டு 
காணாமல் போன மலேசிய விமானத்தை அதை இயக்கிய இரு விமானிகளில் ஒருவரான கேப்டன் ஜஹாரி அகமது ஷா கடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



கடந்த 8-ந் தேதி காணாமல் போன அந்த விமானத்தின் பயணத்தை துவக்குவதற்கு முன் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மீதான விசாரணையில் குறிப்பிட்ட அந்த விமானி கலந்து கொண்டதாக மலேசிய அதிகாரிகள் கருதுகின்றனர். நேற்று தலைநகர் கோலாலம்பூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து விமானத்தை கட்டுப்படுத்த பயன்படும் சைமுலேட்டர் என்ற கருவியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதைக் கொண்டு விமானத்தை எப்படி காணாமல் போகவைப்பது என பயிற்சி எடுத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
விமானத்தை கண்டறியும் முயற்சியில் 25 நாடுகள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டும் எவ்வித முன்னேற் றமும் ஏற்படவில்லை. மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானத்தை அதன் சுற்றுப் பாதையிலிருந்து மாற்றி அந்தமான் கடற்பகுதியில் பறக்கும் வகையில் ஜஹாரி செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


பின்னர் அவர் அந்த விமானத்தை எங்காவது மறைவிடத்தில் தரையிறக்கி இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளதால் அந்நாட்டு அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ad

ad