விழுப்புரத்தில் செந்தமிழன் சீமானைக் கைது செய்த பொலிஸ்! (Photos)
விழுப்புரம் அடுத்த வானூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள திங்கள்கிழமை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார்.
இப்பகுதியில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனை மீறி ஊருக்குள் நுழைந்ததாக சீமான் உள்ளிட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறைந்த இயக்குநர் மணிவண்ணன் படத்திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள வந்தபோது சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.