சென்னையில் இல.கணேசன் உட்பட ஆயிரக்கணக்காணோர் கைது
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
தடையை மீறி போராட்டத்திற்கு முயன்ற பாஜகவினரை கைது செய்து வருகிறது போலீஸ். சென்னை மாநகரம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இல.கணேசன்,தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.