புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2013

இளம் தமிழ்பெண் கனடாவில் மாயம்

கனடா ரொறோன்ரோவில் 16 வயதாகும் தாமர துரைரத்னம் என்ற இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த விடயத்தில் பொதுமக்களின் உதவியையும் வேண்டியுள்ளனர். இந்தப் பெண் கடந்த புதன்கிழமை காணாமல் போயுள்ளார்.
பிஞ்ச் அவென்யூவிலிருந்து கடந்த புதன்கிழமை காலை 11 மணிக்கு
மேல் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது.
5’1″ அடி உயரமும், ஒல்லியான உடல் தேகமும் கொண்டவராக இருப்பார். காணாமல் போன அன்று கருப்பு காற்சட்டையும், அடர் சாம்பல் நிற மேற்சட்டையும் அணிந்திருந்தார்.
இளம்பெண் என்பதால் இவரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மேலதிக தகவல்கள் அறிந்தோர் உடனடியாக காவல்துறையை 416-808-3300, 416-222-8477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ad

ad