புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2013

இளவரசன் கொலையில் சந்தேகம்! தவறான தகவல்களை பரப்புகிறது காவல்துறை! பெற்றோர் குற்றச்சாட்டு! 
தருமபுரி இளவரசன் கொலையில் சந்தேகம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். காவல்துறையினர் தவறான
தகவல்களை பரப்பி வருவதாகவும், நடுநிலையோடு விசாரணை நடைபெறவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தருமபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசனின் மரணம் அதிர்ச்சியையும், பெரும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. இளவரசனின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நத்தம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் சென்னையில் சனிக்கிழமை அவரது பெற்றோர் தங்களது வழக்கறிஞர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இளவரசனின் தந்தை இளங்கோ கூறியதாவது, 
இளவரசனின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. ஆகவே இளவரசன் மரணம் குறித்த விசாரணை நேர்மையாகவும், சார்பின்றி நடுநிலையோடு நடைபெறுவதற்கு தமிழக அரசு வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு துறைக்கோ அல்லது சிறப்பு புலனாய்வு துறைக்கோ மாற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். 
தற்கொலை என்று தெரிவித்து இளவரசன் கொலை வழக்கை விரைவில் முடிப்பதற்கு காவல்துறை திட்டமிட்டுள்ளது. இளவரசன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல. அது முழுக்க முழுக்க கொலைதான் என்றார்.
படங்கள்: ஸ்டாலின்

ad

ad