புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2013

மத்திய மாகாண சபை தேர்தல். தொ.கா. வேட்பாளர் தெரிவு பூர்த்தி அதிகளவு புதுமுகங்கள்; பெண்கள் எவரும் இல்லை

மத்திய மாகாண சபைத் தேர்தலில் இ. தொ. கா. சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களில் 90 வீதமானவர்கள் புது முகங்கள் என கட்சியின் தலைவரும்
பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இ. தொ. கா. தனது வேட்பாளர் தெரிவை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளதகாவும், நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலில் இம்முறை பெண்களின் பங்களிப்பு முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

ad

ad