புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2013

மாற்று அரசியல் தகுதி மதிமுகவுக்குத்தான் உண்டு :வைகோ
ஈரோட்டில் இன்று இரவு நடைபெற்ற மதிமுக தேர்தல் நிதி அளிக்கும் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் சார்பில் அளிக்கப்பட்ட ரூ.36 லட்சம் தேர்தல் நிதியை 
மதிமுக பொதுச்செயலர் வைகோ பெற்றுக் கொண்டார்.


பின்னர் அவர் பேசியபோது,  ’’ஒரு வாரப்பத்திரிகை வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கணேசமூர்த்திக்கு 41 மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி, இலவச ரத்த தான கழகம் தொடங்கி கட்சிக்கு முன்னோடியாக இருந்தது கணேசமூர்த்திதான். அடுத்த மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டி யிடுவது உறுதி. ஈரோடு தொகுதியில் மதிமுக போட்டியிடும்.


யார் வேட்பாளர் என்பது தொண்டர்களுக்கு 
தெரியும்.எனவே இப்போதே பணிகளை தொடங்க வேண்டும். மற்றவர்கள் சாதித்ததவை விட மதிமுகவால் எதையும் சாதிக்க முடியும். மக்கள் முன்னாடி நின்று வாக்கு கேட்கும் தகுதி மதிமுகவுக்கு மட்டும்தான் உண்டு.

இளைஞர்களின் பார்வை மதிமுக பக்கம் திரும்பியுள்ளது. அதிமுக, திமுகவுக்கு மாற்று அரசியல் சக்தியாக மதிமுக தான் இருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. எனவே, மாற்று அரசியல் தகுதி மதிமுகவுத்தான் உண்டு. 2016-ல் மதிமுக தலைமையில் மாற்று அரசியலுக்கான அணி உருவாகும்’’ என்றார்.

ad

ad